பதிவு செய்த நாள்
03 மே2016
06:43
புதுடில்லி : டாடா பவர் நிறுவனம், தன் பங்குதாரர்களுக்காக புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.டாடா பவர் நிறுவனம் தன் பங்குதாரர்களுக்காக டிஜிட்டல் சேவைகளை வழங்க உள்ளது. இதன் முதற்கட்டமாக, பங்குதாரர்களின் பயன்பாட்டுக்காக மொபைல் ஆப் வசதியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த யுனிவர்சல் மொபைல் ஆப், பங்குதாரர்களுக்கு மட்டுமின்றி, டாடா பவர் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இது குறித்து டாடா பவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், அதன் நிர்வாக இயக்குனருமான, அனில் சர்தானா கூறியதாவது: டாடா பவர் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்படுவதன் மூலமாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக பெறவும், பிரச்னைகளை சரி செய்து கொள்ளவும், கணக்கு வழக்குகளை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|