பதிவு செய்த நாள்
03 மே2016
17:52
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக சரிந்த நிலையில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமானது. ஆனால் வர்த்தகநேர முடிவில் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வாலும், முதலீட்டாளர்கள், முக்கிய நிறுவன பங்குகளை அதிகளவில் வாங்க தொடங்கியதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 166 புள்ளிகளும், நிப்டி 57 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமானது.
ஆனால் சீனா உற்பத்தி எதிர்பார்த்ததை விட சரிந்ததால் ஆசிய பங்குச்சந்தைகள் சரிந்தன. இதனால் இந்திய பங்குச்சந்தைகளும் சரிய தொடங்கின. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 207 புள்ளிகள் சரிந்து கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு 25,229.70-ஆகவும், நிப்டி 59 புள்ளிகள் சரிந்து 7,747-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|