பதிவு செய்த நாள்
04 மே2016
00:49
ஹாங்காங் : ‘அடுத்த இரு ஆண்டுகளில், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரம் மேலும் சரிவடையும்’ என, ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியம் எச்சரித்துள்ளது.
அதன் அறிக்கை விவரம்: உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது. எனினும், கால் நுாற்றாண்டில் இல்லாத அளவாக, 2015ல், சீன பொருளாதாரம் மந்தமடைந்து, 6.9 சதவீதமாக குறைந்தது. இது, இந்தாண்டு, 6.5 சதவீதம் என்ற அளவில் மேலும் சரிவடையும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, அரசு முதலீடுகள் மற்றும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. இதை மாற்றும் முயற்சியில், சீன தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச மந்தநிலையால், உள்நாட்டு பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளனர். இதன் தாக்கத்தால் சுணக்கமாக உள்ள, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 2017ல், 6.2 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது.
அதுபோல, ஜப்பான் பொருளாதாரமும் மந்தநிலையில் உள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான, ஜப்பான் கரன்சியான, யென் மதிப்பு உயர்ந்துள்ளது. அத்துடன், சீனாவுக்கான ஏற்றுமதியும் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், ஜப்பான் பொருளாதார வளர்ச்சி, 0.5 – 0.1 சதவீதம் என்ற அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விறு விறு இந்தியா ஆசிய பிராந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், வளர்ச்சி வலுவாக இருக்கும். அவற்றில், இந்தியா தான் 7.5 சதவீதம் என்ற அளவில், மிக வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக விளங்குகிறது. –பன்னாட்டு நிதியம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|