ஹிட்­டாச்சி நிறு­வனம் முத­லி­டத்தை பிடிக்க திட்டம்ஹிட்­டாச்சி நிறு­வனம் முத­லி­டத்தை பிடிக்க திட்டம் ... உல­கி­லேயே முதன் முத­லாக... சிங்­கப்பூர் வைர முத­லீட்டு சந்­தையில் வர்த்­தகம் துவங்­கி­யது உல­கி­லேயே முதன் முத­லாக... சிங்­கப்பூர் வைர முத­லீட்டு சந்­தையில் ... ...
தடை கடந்து அமெ­ரிக்கா சென்ற இந்­திய மாதுளை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2016
04:16

மும்பை : கடந்த, 26 ஆண்­டு­க­ளுக்குப் பின், இந்­தியா அனுப்­பிய, 1.3 டன் மாதுளம் பழம், அமெ­ரிக்­காவில், மே 1ம் தேதி இறக்­கு­ம­தி­யா­னது.
அமெ­ரிக்கா, 1990ல், இந்­திய மாம்­ப­ழங்­களின் இறக்­கு­ம­திக்கு தடை விதித்­தது. பூச்சி தாக்­குதல் தொடர்­பான இந்த நட­வ­டிக்­கையில், மாதுளை, திராட்சை, லிச்சி போன்ற பழங்­களின் ஏற்­று­ம­தியும் பாதிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில், நவீன வேளாண் முறை­களில் உற்­பத்தி செய்­யப்­பட்ட, பாது­காப்­பான மாம்­ப­ழங்­களின் இறக்­கு­ம­திக்கு, சில ஆண்­டு­க­ளுக்கு முன், அமெ­ரிக்கா அனு­மதி அளித்­தது. இதை­ய­டுத்து, மாதுளை, திராட்சை, லிச்சி ஆகி­ய­வற்­றுக்­கான தடையை நீக்­கவும், மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுத்­தது.
அதன் விளை­வாக, அமெ­ரிக்க உணவு தரக் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரிகள் குழு, மஹா­ராஷ்­டிர மாநிலம், வாஷிக்கு வந்­தது; அங்­குள்ள, கதி­ரி­யக்க ஆய்­வ­கத்தில், மாதுளம் பழங்கள் ஆய்வு செய்­யப்­பட்­டன. அவற்றில், உட­லுக்கு ஊறு விளை­விக்கும் அம்­சங்கள் இல்லை என்­பது தெரி­ய­வந்­ததை அடுத்து, அவற்றின் ஏற்­று­ம­திக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.அதன்­படி, கே.பி.எக்ஸ்போர்ட்ஸ் நிறு­வ­னத்தின், 1.30 டன் ‘பக்வா’ மாதுளம் பழங்கள், முதன் முத­லாக, அமெ­ரிக்­கா­விற்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­டன.
உல­க­ளவில், இந்­தியா, ஆண்­டுக்கு, 20 லட்சம் டன் மாது­ளை­களை உற்­பத்தி செய்து, முத­லி­டத்தில் உள்­ளது. இருந்­த­போ­திலும், 20 ஆயிரம் டன் அள­விற்கே, ஐரோப்பா மற்றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு மாதுளை ஏற்­று­ம­தி­யா­கி­றது. இது, அமெ­ரிக்க ஏற்­று­ம­தியால், இந்­தாண்டு, 50 ஆயிரம் டன் ஆக உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)