பதிவு செய்த நாள்
24 மே2016
10:48
சென்னை: ''கடந்த நிதியாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வணிகம், 48 ஆயிரத்து, 411 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,'' என, வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான என்.காமகோடி தெரிவித்தார்.
சென்னையில் நேற்று காமகோடி கூறியதாவது: சிட்டி யூனியன் வங்கியின் தலைவர் பாலசுப்ரமணியன், மே, 3ல் ஓய்வு பெற்றார். புதிய தலைவராக மகாலிங்கம் நியமிக்கப்பட்டு உள்ளார். வங்கியின் பொது சேவை அங்கமான, சி.யூ.பி., அறக்கட்டளையின் கவுரவ தலைவராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த, 2015 - 16ம் ஆண்டு, வங்கி துறைக்கு நெருக்கடியாக இருந்தது. இருப்பினும், சிட்டி யூனியன் வங்கி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், வங்கியின் மொத்த வணிகம், 48 ஆயிரத்து, 411 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், வங்கி திரட்டிய டிபாசிட், 27 ஆயிரத்து, 158 கோடி ரூபாயாகவும், வழங்கிய கடன், 21 ஆயிரத்து, 253 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதே காலத்தில், நிகர லாபம், 445 கோடி; மொத்த வருவாய், 3,102.96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.தற்போது எங்கள் வங்கிக்கு, 525 கிளைகள்; 1,325 ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா மையங்கள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|