பதிவு செய்த நாள்
25 மே2016
07:42
புதுடில்லி : மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, ஷிதிபீபிள்.டிவி எனும் பெண்களுக்கான, இணையதள டிஜிட்டல் மீடியாவில் முதலீடு செய்துள்ளார். பத்திரிகையாளரான ஷாய்லி ஷோப்ரா இதன் நிறுவனர். ஆனந்த் மகிந்திரா எவ்வளவு தொகையை, இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார் என்பது பற்றி தெரியவில்லை.‘‘வருங்காலத்தில் தலைவர்களாக வரவிருக்கும் பெண்களுக்கு, மிகவும் துாண்டுதலை தரும் வகையில், இந்நிறுவன செயல்பாடு இருக்கும்,’’ என ஆனந்த் மகிந்திரா தெரிவித்திருக்கிறார். ஷிதிபீப்பிள்.டிவி, இதுவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நம்பிக்கை ஊட்டும் பெண்களின் வாழ்க்கை குறித்த நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது. இந்நிறுவனம், மத்திய அரசு கடந்த ஜனவரியில் நடத்திய, ‘ஸ்டார்ட் அப் இந்தியா; ஸ்டாண்ட் அப் இந்தியா’ எனும் நிகழ்ச்சியின் அதிகாரபூர்வ பார்ட்னராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|