பதிவு செய்த நாள்
25 மே2016
07:43
புதுடில்லி : ரஷ்யாவைச் சேர்ந்த சிஸ்டெமா குழுமம், 2009ல், இந்தியாவில், ஷியாம் டெலிசர்வீஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கி, தொலைதொடர்பு சேவையில் களமிறங்கியது. இந்நிறுவனம், தமிழகம், கேரளா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், எம்.டி.எஸ்., என்ற பிராண்டு பெயரில், தொலைதொடர்பு சேவை வழங்குகிறது.
இணைப்பு நடவடிக்கைஇந்நிலையில், கடும் போட்டியை சமாளிக்க முடியாமல், சிஸ்டெமா ஷியாம் டெலிசர்வீசஸ் நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளது. ‘இணைப்பு நடவடிக்கையை அடுத்து உருவாகும் புதிய நிறுவனத்தில், சிஸ்டெமா, 10 சதவீத பங்கை கொண்டிருக்கும்’ என, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செர்ஜி சாவ்சென்கோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில், அலைவரிசை உரிமத்திற்கான தொகை மிக அதிகமாக உள்ளது. அதையும் சமாளித்து, 2012 முதல், அதிநவீன 4ஜி தொழில்நுட்பத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிகமாக செலவிட்டுள்ளோம். அடுத்து, 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான ஏலம் நடைபெற உள்ளது. இதில், 5.36 லட்சம் கோடி ரூபாய் வரை, ஏலம் போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வெளியேற மாட்டோம்இந்நிலையில், மேலும் தொடர்ந்து முதலீடு செய்ய முடியாது என்பதால், நிறுவனத்தை, ரிலையன்ஸ் உடன் இணைக்க முடிவு செய்தோம். எனினும்,இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம் தொடர்ந்து முதலீட்டிற்கான தொழில் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|