பதிவு செய்த நாள்
25 மே2016
07:44
மும்பை : ‘இந்தியாவில், பங்குச் சந்தை முதலீடுகளில், பெண்களை விட, ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்’ என, சி.டி.எஸ்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கியில் சேமிப்பு கணக்கை துவக்குவது போல, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, ‘டீமேட் அக்கவுன்ட்’ எனப்படும், மின்னணு பங்கு வர்த்தக கணக்கு அவசியம். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவோர், வங்கிகள், நிதி நிறுவனங்கள், பங்குத் தரகு சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில், டீமேட் கணக்கை துவக்கலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்இந்த டீமேட் கணக்குகளை பராமரிக்கும் பொறுப்பை, சி.டி.எஸ்.எல்., மேற்கொள்கிறது. இந்த வகையில், இந்நிறுவனம், 1.09 கோடிக்கும் அதிகமான பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் டீமேட் கணக்குகளை கையாண்டு வருகிறது.அதில், 2011, மார்ச் 31 முதல், 2015, மார்ச் வரையிலான நிலவரப்படி, பெண்களின் பங்களிப்பு, 24 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது என, சி.டி.எஸ்.எல்., தெரிவித்துள்ளது.சமீப ஆண்டுகளாக, பெண்களின் நிதியாதாரம் பெருகி வருவதாக கூறப்பட்டாலும், பங்குச் சந்தை முதலீடுகளை பொறுத்தவரை, அவர்கள், ஆண்களை விட, மிகவும் பின்தங்கியுள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்களில், ஆண்கள், 81 சதவீதமும், பெண்கள், 19 சதவீதமும், டீமேட் கணக்கு வைத்துள்ளனர். வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களில், பெண்களை விட, ஆண்கள் அதிகம் உள்ளதால், பங்குச் சந்தை முதலீடுகளில், ஆண்களின் பங்களிப்பும் அதிகமாக உள்ளது. டீமேட் கணக்குகளில், மும்பை, ஆமதாபாத், சென்னை உள்ளிட்ட, 18 நகரங்களின் பங்களிப்பு, 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. பிற நகரங்களிலும் பரவலாக, டீமேட் கணக்குகள் அதிகரித்து வருகின்றன.முதலீட்டாளர்களின் அனைத்து டீமேட் கணக்குகளிலும், 100 சதவீத பரிவர்த்தனைகள் நடைபெறுவதில்லை. கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில், 75 சதவீத டீமேட் கணக்குகளில், ஒரு முறை கூட, பங்கு பரிவர்த்தனை நடைபெறவில்லை.
சந்தை நிலவரம்பங்குச் சந்தை சிறப்பாக இருந்தால் மட்டுமே, சில்லரை முதலீட்டாளர்கள், அதிக அளவில் பங்குகளில் முதலீடு செய்ய முன்வருகின்றனர். பங்கு முதலீடுகளில், மிகுந்த எச்சரிக்கை உணர்வு தேவை. இந்த வகையில், ஆண், பெண் என, இரு தரப்பினரின் பங்கு முதலீடுகளை தீர்மானிப்பதில், பங்குச் சந்தை நிலவரம் முக்கிய பங்கு வகிக்கிறது.பங்குச் சந்தைக்கும், டீமேட் கணக்கிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பங்குச் சந்தை நன்கு இருந்தால், அதிக அளவில் டீமேட் கணக்குகள் துவக்கப்படுகின்றன என, சி.டி.எஸ்.எல்., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளாக, பெண்களின் நிதியாதாரம் பெருகி வருவதாக கூறப்பட்டாலும், பங்குச் சந்தை முதலீடுகளை பொறுத்தவரை, அவர்கள், ஆண்களை விட, மிகவும் பின்தங்கியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|