அலை­வ­ரிசை உரிம தொகை அதிகம்: சிஸ்­டெமாஅலை­வ­ரிசை உரிம தொகை அதிகம்: சிஸ்­டெமா ... ஒன்பது நாள் சரிவுக்கு பின்னர் ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.33 ஒன்பது நாள் சரிவுக்கு பின்னர் ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.33 ...
இந்­தி­யாவில் பங்குச்சந்தை முத­லீ­டு­களில் பெண்­க­ளுக்கு ஆர்வம் குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2016
07:44

மும்பை : ‘இந்­தி­யாவில், பங்குச் சந்தை முத­லீ­டு­களில், பெண்­களை விட, ஆண்­களே ஆதிக்கம் செலுத்­து­கின்­றனர்’ என, சி.டி.எஸ்.எல்., நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
வங்­கியில் சேமிப்பு கணக்கை துவக்­கு­வது போல, பங்குச் சந்­தையில் முத­லீடு செய்ய, ‘டீமேட் அக்­கவுன்ட்’ எனப்­படும், மின்­னணு பங்கு வர்த்­தக கணக்கு அவ­சியம். பங்கு வர்த்­த­கத்தில் ஈடு­பட விரும்­புவோர், வங்­கிகள், நிதி நிறு­வ­னங்கள், பங்குத் தரகு சேவை நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்றில், டீமேட் கணக்கை துவக்­கலாம்.
வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­இந்த டீமேட் கணக்­கு­களை பரா­ம­ரிக்கும் பொறுப்பை, சி.டி.எஸ்.எல்., மேற்­கொள்­கி­றது. இந்த வகையில், இந்­நி­று­வனம், 1.09 கோடிக்கும் அதி­க­மான பங்குச் சந்தை முத­லீட்­டா­ளர்­களின் டீமேட் கணக்­கு­களை கையாண்டு வரு­கி­றது.அதில், 2011, மார்ச் 31 முதல், 2015, மார்ச் வரை­யி­லான நில­வ­ரப்­படி, பெண்­களின் பங்­க­ளிப்பு, 24 சத­வீதம் என்ற அள­விற்கே உள்­ளது என, சி.டி.எஸ்.எல்., தெரி­வித்­துள்­ளது.சமீப ஆண்­டு­க­ளாக, பெண்­களின் நிதி­யா­தாரம் பெருகி வரு­வ­தாக கூறப்­பட்­டாலும், பங்குச் சந்தை முத­லீ­டு­களை பொறுத்­த­வரை, அவர்கள், ஆண்­களை விட, மிகவும் பின்­தங்­கி­யுள்­ளனர்.
வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­களில், ஆண்கள், 81 சத­வீ­தமும், பெண்கள், 19 சத­வீ­தமும், டீமேட் கணக்கு வைத்­துள்­ளனர். வெளி­நா­டு­களில் பணி­யாற்றும் இந்­தி­யர்­களில், பெண்­களை விட, ஆண்கள் அதிகம் உள்­ளதால், பங்குச் சந்தை முத­லீ­டு­களில், ஆண்­களின் பங்­க­ளிப்பும் அதி­க­மாக உள்­ளது. டீமேட் கணக்­கு­களில், மும்பை, ஆம­தாபாத், சென்னை உள்­ளிட்ட, 18 நக­ரங்­களின் பங்­க­ளிப்பு, 40 சத­வீதம் என்ற அளவில் உள்­ளது. பிற நக­ரங்­க­ளிலும் பர­வ­லாக, டீமேட் கணக்­குகள் அதி­க­ரித்து வரு­கின்­றன.முத­லீட்­டா­ளர்­களின் அனைத்து டீமேட் கணக்­கு­க­ளிலும், 100 சத­வீத பரி­வர்த்­த­னைகள் நடை­பெ­று­வ­தில்லை. கடந்த, 2014 – 15ம் நிதி­யாண்டில், 75 சத­வீத டீமேட் கணக்­கு­களில், ஒரு முறை கூட, பங்கு பரி­வர்த்­தனை நடை­பெ­ற­வில்லை.
சந்தை நில­வரம்பங்குச் சந்தை சிறப்­பாக இருந்தால் மட்­டுமே, சில்­லரை முத­லீட்­டா­ளர்கள், அதிக அளவில் பங்­கு­களில் முத­லீடு செய்ய முன்­வ­ரு­கின்­றனர். பங்கு முத­லீ­டு­களில், மிகுந்த எச்­ச­ரிக்கை உணர்வு தேவை. இந்த வகையில், ஆண், பெண் என, இரு தரப்­பி­னரின் பங்கு முத­லீ­டு­களை தீர்­மா­னிப்­பதில், பங்குச் சந்தை நில­வரம் முக்­கிய பங்கு வகிக்­கி­றது.பங்குச் சந்­தைக்கும், டீமேட் கணக்­கிற்கும் நெருங்­கிய தொடர்பு உள்­ளது. பங்குச் சந்தை நன்கு இருந்தால், அதிக அளவில் டீமேட் கணக்­குகள் துவக்­கப்­ப­டு­கின்­றன என, சி.டி.எஸ்.எல்., ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
சமீப ஆண்­டு­க­ளாக, பெண்­களின் நிதி­யா­தாரம் பெருகி வரு­வ­தாக கூறப்­பட்­டாலும், பங்குச் சந்தை முத­லீ­டு­களை பொறுத்­த­வரை, அவர்கள், ஆண்­களை விட, மிகவும் பின்­தங்­கி­யுள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)