பதிவு செய்த நாள்
25 மே2016
10:39
மும்பை : கடந்த ஒன்பது நாட்களாக சரிவிலிருந்து ரூபாயின் மதிப்பு இன்று(மே 25ம் தேதி) ஏற்றம் கண்டுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.67.55-ஆக இருந்தது. தொடர்ந்து உயர்ந்த ரூபாயின் மதிப்பு வர்த்தகம் முடியும் போது ரூ.67.33-ஆக உயர்ந்தது.
இந்திய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வாலும், உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்ததாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு 26 காசுகள் சரிந்து ரூ.67.75-ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|