அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் வருவாயை பெருக்க திட்டம்அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் வருவாயை பெருக்க திட்டம் ... இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு ... ...
இழப்பில் தத்தளிக்கும் 24 விமான நிலையங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2016
00:26

புதுடில்லி : பிராந்திய அளவிலான விமான சேவைகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் துவக்கப்பட்ட, 24 விமான நிலையங்கள், விமான சேவையை மேற்கொள்ளாமல், தொடர்ந்து இழப்பை கண்டு வருகின்றன.
இந்த விமான நிலையங்கள், 2014 – 15ம் நிதியாண்டில், 100.33 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன; ஆனால், அவற்றை பராமரிக்க, இந்திய விமான போக்குவரத்து ஆணையம், 298.60 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. கடந்த ஆட்சியில், விமான போக்குவரத்து அமைச்சர், பிரபுல் படேல், பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் திறந்து வைத்த விமான நிலையம், 2012 – 15 வரையிலான மூன்று நிதியாண்டுகளில், ஒரு பைசா கூட வருவாய் ஈட்டாமல் உள்ளது. இதே காலத்தில், இதன் பராமரிப்பிற்காக, 11.50 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, 2012ல், மஹாராஷ்டிராவில், முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தன் சொந்த ஊரான ஜல்கானில் துவக்கி வைத்த விமான நிலையம், ஒரு விமான சேவையைக் கூட மேற்கொள்ளாமல் உள்ளது. பிற சேவைகளில், ஐந்து லட்சம் ரூபாய் ஈட்டி, பராமரிப்பிற்கு, 3.45 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை மேற்கொள்ளாமல், மூன்று ஆண்டுகளில், 25 லட்சம் ரூபாய் மட்டும் ஈட்டிய, சிம்லா விமான நிலையத்தின் பராமரிப்பிற்கு, 22.86 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், ஜூஹு விமான நிலையம் மட்டும், 2014 – 15ல், பராமரிப்பு செலவான, 22.64 கோடி ரூபாயை விட, 15.22 கோடி ரூபாய் அதிகம் சம்பாதித்து, 37.86 கோடி ரூபாய் என்ற அளவில் வருவாய் ஈட்டியுள்ளது. ‘விமான சேவை நிறுவனங்களை கலந்து ஆலோசிக்காமல், அரசியல் லாபத்திற்காக துவக்கப்பட்டதால் தான், விமான நிலையங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன’ என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)