இழப்பில் தத்தளிக்கும் 24 விமான நிலையங்கள்இழப்பில் தத்தளிக்கும் 24 விமான நிலையங்கள் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.17 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.17 ...
இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2016
00:28

புதுடில்லி : இந்தியாவில் இருந்து, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படி, ‘மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் போது, அவற்றில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு குறித்த அறிக்கையை, இந்திய நிறுவனங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும்’ என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைமுறை, இம்மாதம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ‘ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்யும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுடன், அவற்றில் காணப்படும், பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு குறித்த ஆய்வறிக்கையை அனுப்ப வேண்டும்’ என, இந்திய நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையை, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான – அபிடா, அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது. உலகில், வேளாண் பொருட்கள் உற்பத்தியில், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவை, அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை விவசாயத்தில் விளையும் வேளாண் பொருட்களில், பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்ட நச்சுப் பொருட்களின் அளவை, ‘கோடக்ஸ் அலிமென்டரியஸ் ஆணையம்’ என்ற சர்வதேச அமைப்பு நிர்ணயம் செய்துள்ளது.
உலக நாடுகள், இந்த அளவீட்டிற்கான சான்றிதழுடன், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. இந்நிலையில், ‘இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி, பூச்சிக் கொல்லி மருந்து கலந்துள்ளது’ என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதையடுத்து, ‘மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, இந்தியாவில் இருந்து, பூச்சிக் கொல்லி மருந்து குறித்த ஆய்வறிக்கையுடன் வந்தால் மட்டுமே, மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஏற்றுமதிகடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்தியா, 2.62 லட்சம் டன் காய்கறிகள், 48,591 டன் பழ வகைகள் ஆகியவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)