பதிவு செய்த நாள்
27 மே2016
07:09
புதுடில்லி : ‘இந்தியாவின் வணிக நம்பிக்கை குறியீடு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, நடப்பு மே மாதம், 61.8 புள்ளிகளாக குறைந்துள்ளது’ என, ‘எம்.என்.ஐ., இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் விவரம்: ‘எம்.என்.ஐ., இந்தியா பிசினஸ் சென்டிமென்ட் இன்டிகேட்டர்’ எனப்படும், நிறுவனங்களின் வர்த்தக நம்பிக்கை குறியீடு, நடப்பு மே மாதம், 61.8 புள்ளிகளாக சரிவடைந்துள்ளது. இது, 2015, டிசம்பருக்குப் பின் காணப்படும் சரிவாகும். தொடர்ந்து, மூன்று மாதங்களாக, குறியீடு குறைந்து வருகிறது. இதில், தயாரிப்பு துறை பெரும்பங்கு வகிக்கிறது. கட்டுமானம் மற்றும் சேவை துறைகளில், நம்பிக்கையான போக்கு காணப்படுகிறது.
கடந்த ஏப்ரலில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை குறைத்த போதிலும், அது, நிறுவனங்களின் வர்த்தகத்தில் பெரிய அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதனால், வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பில்லை. கச்சா எண்ணெய் விலை, சரிவில் இருந்து மீண்டு வருவதன் எதிரொலியாக, மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இது, அடுத்த மூன்று மாதங்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது.
நிறுவனங்கள், தயாரிப்பு பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. அதனால், நடப்பு மாதத்தில், புதிய ஆர்டர்களும் மிதமான அளவிற்கே இருந்தன. அதேசமயம், ஏற்றுமதி ஆர்டர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த அளவிற்கு, வெகுவாக குறைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|