பதிவு செய்த நாள்
27 மே2016
15:36
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நாவல்பழம் சீசன் துவங்கியுள்ளது. வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.240 க்கு விற்பனையானது.கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து என மருத்துவ குணம் கொண்ட நாவல்பழம் ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, நத்தம், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி பகுதிகளில் 10 ஏக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. சர்க்கரை நோய், மூல நோய்க்கு மருந்தாகவும், பழம் மட்டுமின்றி நாவல் பழம் கொட்டையும் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.நாவல் பழம் சீசன் காலத்தில் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும் 300 கிலோ வரை விற்பனைக்கு வரும். தற்போது பெரிய அளவில் சாகுபடி இல்லாததால் வரத்து குறைந்துள்ளது. ஆந்திராவில் இருந்து தினமும் 400 கிலோ நாவல்பழம் விற்பனைக்கு வருகிறது. உள்ளூர் வரத்து இல்லாததால் ஒரு கிலோ ஆந்திரா நாவல் பழம் ரூ.240 க்கு விற்பனையானது.வியாபாரி ஒருவர் கூறுகையில்,'வரத்து இல்லாததால் விலை அதிகம் உள்ளது. இன்னும் சில வாரங்களில் ஆயக்குடி, நத்தம் பகுதியில் இருந்து நாவல்பழம் வரத்து வர துவங்கினால் விலை குறைய வாய்ப்புள்ளது', என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|