பதிவு செய்த நாள்
27 மே2016
15:38
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வரத்து குறைவால் மிளகு கிலோ ரூ.800யாக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் ஊட்டி, குன்னுார், ஏலகிரி, ஏற்காடு மலைப்பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கொடைக்கானல் பகுதியிலும் 875 ஏக்டேரில் மிளகு பயிரிட்டு சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பிற பகுதிகள், கேரளாவில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை 2 டன் மிளகு விற்பனைக்கு வரும்.தமிழகம் மற்றும் கேரள மலைப்பகுதிகளில் மிளகு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. சாகுபடி செய்யப்படும் குறைந்தளவு மிளகும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளூர் மார்க்கெட்டிற்கு வரத்து இல்லை. இதனால் மிளகு விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ மிளகு ரூ.760 க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் கிலோ ரூ.800 க்கு விற்றது.வியாபாரி பாலாஜி கூறுகையில்,'கேரள, ஏற்காடு, குன்னுாரில் இருந்து வரும் மிளகு வரத்தும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது',என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|