பதிவு செய்த நாள்
29 மே2016
01:09
மும்பை:உலகில், ஆடம்பர பொருட்கள் துறையில், அதிக லாபம் ஈட்டும், 100 நிறுவனங்களில், இந்தியாவைச் சேர்ந்த, மூன்று நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.இதில், கை கெடிகாரம், தங்க நகைகள் ஆகியவற்றை விற்பனை செய்யும், டைட்டன் நிறுவனம், 32வது இடத்தை பிடித்துள்ளது. நவரத்தினங்கள், தங்க நகைகள் ஏற்றுமதி நிறுவனமான, கீதாஞ்சலி ஜெம்ஸ், 40வது இடத்தையும், பி.சி.ஜுவல்லர்ஸ், 44வது இடத்தையும் பிடித்துள்ளன.
‘இந்திய மக்களிடம் வாங்கும் சக்தி பெருகியுள்ளதால், அவர்கள் ஆடம்பர பொருட்களை நாடுவது அதிகரித்து வருகிறது’ என, ஆய்வு மேற்கொண்ட, ‘டெலாய்ட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் ‘டாப் 10’ நிறுவனங்களில், பிரான்சின், லுாயிஸ் உட்டன் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களை ரிச்மான்ட், எஸ்டி லாடர் ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|