ஆடம்­பர பொருட்கள் வர்த்­தகம்‘டாப் 100’ல் 3 இந்­திய நிறு­வ­னங்கள் ஆடம்­பர பொருட்கள் வர்த்­தகம்‘டாப் 100’ல் 3 இந்­திய நிறு­வ­னங்கள் ... ‘கார்டு’ பயன்­பாட்டை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை ‘கார்டு’ பயன்­பாட்டை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை ...
அடுத்த 2 ஆண்­டு­களில்உணவு பதப்­ப­டுத்­துதல் துறையில்100 கோடி டாலர் அன்­னிய முத­லீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2016
01:11

புது­டில்லி:‘‘இரு ஆண்­டு­களில், இந்­திய உணவு பதப்­ப­டுத்­துதல் துறையில், அன்­னிய நிறு­வ­னங்­களின்் முத­லீடு, 100 கோடி டாலரை தாண்டும்,’’ என, மத்­திய உணவு பதப்­ப­டுத்­துதல் துறை அமைச்சர் ஹர்­சிம்ரத் கவுர் பாதல் நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.
பிர­தமர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசின் ஈராண்டு சாத­னைகள் குறித்து, அவர் கூறி­ய­தா­வது:இந்­தி­யாவில் உற்­பத்­தி­யாகும் காய்­க­றிகள் மற்றும் பழங்­களில், 10 சத­வீதம் தான், பதப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. பதப்­ப­டுத்தி பாது­காக்க, போது­மான வச­திகள் இல்­லா­ததால், காய்­க­றி­களும், பழங்­களும் வீணா­கின்­றன. இதனால், தங்கள் விளை­பொ­ரு­ளுக்கு, உரிய விலை கிடைக்­காமல் விவ­சா­யிகள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.
உணவுப் பூங்கா:இந்த பிரச்­னைக்கு தீர்வு காணும் நோக்கில், உணவுப் பூங்­காக்கள் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. வரும், 2019ம் ஆண்­டிற்குள், நாடு முழு­வதும், 42 உணவுப் பூங்­காக்கள் அமைக்­கப்­படும். இதில், 17 பூங்­காக்­க­ளுக்கு, தற்­போது அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு உணவு பூங்­கா­விற்கு, தலா, 50 கோடி ரூபாய் வீதம், மத்­திய அரசு மானியம் ஒதுக்­கி­யுள்­ளது. கடந்த இரு ஆண்­டு­களில், ஏழு உணவுப் பூங்­காக்கள் செயல்­பாட்­டிற்கு வந்­துள்­ளன.
முந்­தைய, ஐக்­கிய முற்­போக்கு கூட்­ட­ணியின், 10 ஆண்டு ஆட்­சியில், இரண்டு உணவு பூங்­காக்கள் மட்­டுமே திறக்­கப்­பட்­டன. கடந்த 2015 – 16ம் நிதி­யாண்டில், பிப்­ர­வரி வரை­யி­லான, 11 மாதங்­களில், உணவு பதப்­ப­டுத்­துதல் துறையில், 46.30 கோடி டாலர் அள­விற்கு அன்­னிய நேரடி முத­லீடு குவிந்­தது. நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டு பட்­ஜெட்டில், உணவு பதப்­ப­டுத்­துதல் துறையில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­திய உணவு பாது­காப்பு மற்றும் தரக் கட்­டுப்­பாட்டு ஆணையம், உணவு பதப்­ப­டுத்­துதல் துறையை ஊக்­கு­விக்கும் வகையில், சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொண்டு வரு­கி­றது. இந்த இரு அம்­சங்­களும், உணவு பதப்­ப­டுத்­துதல் துறையில், அன்­னிய முத­லீ­டு­களை ஈர்க்கும். அதனால், அடுத்த இரு ஆண்­டு­களில், உணவு பதப்­ப­டுத்­துதல் துறையில், அன்­னிய நேரடி முத­லீடு, 100 கோடி டாலரை தாண்டும். நாடு முழு­வதும், 30 குளிர்­ப­தன கிடங்­கு­களை அமைக்க, அமைச்­சகம் ஒப்­புதல் அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு...இத்­த­கைய நட­வ­டிக்­கை­களால், காய்­க­றிகள், பழங்கள் உற்­பத்­தியில், பதப்­ப­டுத்­தப்­ப­டு­ப­வற்றின் பங்கு, இரு மடங்கு உயர்ந்து, 20 சத­வீ­த­மாக அதி­க­ரிக்கும். காய்­க­றிகள், பழங்கள் ஆகி­யவை வீணா­வது கட்­டுப்­ப­டுத்­தப்­படும் என்­பதால், அவற்றை பயி­ரிடும் விவ­சா­யி­க­ளுக்கு, நல்ல விலை கிடைக்கும். அதே­ச­மயம், நுகர்­வோ­ருக்கும், குறைந்த விலையில், காய்­க­றிகள், பழங்கள் ஆகி­யவை கிடைக்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)