பதிவு செய்த நாள்
29 மே2016
01:12
மும்பை;மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, ரொக்கப் பரிவர்த்தனைகளை குறைத்து, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளின் பயன்பாட்டை அதிகரிக்க, தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. இந்தியாவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான, ரொக்க பரிவர்த்தனை, 12 சதவீதமாக உள்ளது. இது, பிரேசில், மெக்சிகோ, தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளில் மிகவும் குறைவாக உள்ளது.
ரொக்க பரிவர்த்தனைகளுக்கு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள், ஆண்டுக்கு, 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகின்றன. இதை குறைக்கவும், ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும், நீரஜ்குமார் குப்தா தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ரொக்கம் இல்லா பரிவர்த்தனைகளை அதிகரிப்பது குறித்து, ஆராய்ந்து வருகிறது.
நாட்டில், 2.45 கோடி ‘கிரெடிட் கார்டு’கள்; 66.18 கோடி ‘டெபிட் கார்டு’கள் புழக்கத்தில் உள்ளன. இத்துடன், வணிக நிறுவனங்களில், 13 லட்சத்திற்கும் அதிகமான, ‘கார்டு’ பரிவர்த்தனை இயந்திரங்கள் உள்ளன. இவற்றை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.வணிக நிறுவனங்களில், ‘கிரெடிட், டெபிட் கார்டு’களுக்கு, முறையே, 1.98 சதவீதம் மற்றும் 0.5 – 1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சில வணிக நிறுவனங்கள், இரண்டு ‘கார்டு’களுக்கும், 2 சதவீத கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றன.இந்த பிரச்னைக்கு தீர்வுகாண, இரு ‘கார்டு’களுக்கும் ஒரே கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்தும், ஆராயப்படுகிறது. மேலும், பெட்ரோல், மின் கட்டணம், ரயில்டிக்கெட் உள்ளிட்ட சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் வரியை ரத்து செய்வது குறித்தும், ஆய்வுக்குழு பரிசீலித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|