2018ல் 29 லட்சம் ஒப்­பந்த தொழி­லா­ளர்கள் 2018ல் 29 லட்சம் ஒப்­பந்த தொழி­லா­ளர்கள் ... பெண்களுக்கான நிதி வழிகாட்டி பெண்களுக்கான நிதி வழிகாட்டி ...
தலைமை பத­வி­க­ளுக்கு ஆள் பற்­றாக்­குறை இந்­திய நிறு­வ­னங்கள் கவலை; ஆய்­வ­றிக்கை தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2016
07:46

புது­டில்லி : இந்­திய நிறு­வ­னங்­களின் தலைமை பொறுப்­பு­களில், தகுதி வாய்ந்த ஆட்­க­ளுக்கு பற்­றாக்­குறை நில­வு­வ­தாக, ‘டெலாய்ட் இந்­தியா’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
இந்­நி­று­வனம், உல­க­ளவில், நிறு­வ­னங்கள் பயன்­ப­டுத்தும், மனித வள மூல­தனம் குறித்து ஆய்வு மேற்­கொண்­டது. கடந்த, 2015ம் ஆண்டு, அக்., – டிச., வரை­யி­லான காலாண்டில், 130க்கும் அதி­க­மான நாடு­களைச் சேர்ந்த, 7,000 நிறு­வ­னங்­களில், இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. இதில், இந்­தி­யாவைச் சேர்ந்த, 239 நிறு­வ­னங்­களின் தலை­வர்கள், மனித வள மேம்­பாட்டு அதி­கா­ரிகள் உள்­ளிட்டோர் பங்­கேற்­றனர்.
ஆய்­வ­றிக்கை விவரம்:இந்­திய நிறு­வ­னங்கள், அவற்றின் பாரம்­ப­ரிய கலா­சார பெரு­மை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கின்­றன. ஆய்வில், 10க்கு எட்டு நிறு­வ­னங்கள், நிறு­வ­னத்தின் கலா­சாரம் தான் மிகவும் முக்­கியம் என, தெரி­வித்­துள்­ளன.
தகுதியான ஆட்கள்ஆய்வில், 35 சத­வீதம் பேர், தங்கள் நிறு­வ­னங்­களின் கலா­சா­ரத்தை புரிந்து கொண்­ட­தாக தெரி­வித்­துள்­ளனர். கலா­சார மாற்­றத்­திற்கு தயா­ராக உள்­ள­தாக, 22 சத­வீதம் பேர் கூறினர். தலைமை பொறுப்பு, உயர்மட்ட பதவி, இரண்டாம் நிலை பத­வி­களில், தகு­தி­யான ஆட்­க­ளுக்கு பற்­றாக்­குறை உள்­ள­தாக, 68 சத­வீதம் பேர் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.இந்­திய நிறு­வ­னங்கள், உயர் பொறுப்­பு­க­ளுக்கு தகுதி வாய்ந்தோர் கிடைக்­காமல் உள்­ள­தாக கவலை தெரி­வித்­துள்­ளன. இத்­த­கைய சூழலில், இந்­திய நிறு­வ­னங்கள், ஊழி­யர்­களின் தலைமை பண்­பு­களை வளர்ப்­ப­தற்கும், அனைத்து மட்­டங்­க­ளிலும், அத்­த­கை­யோரை உரு­வாக்­கு­வ­தற்கும் முத­லீடு செய்ய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அடுத்த தலை­முறை தலை­வர்கள், பெண்கள் மற்றும் பல­த­ரப்­பட்ட ஆற்றல் உள்­ளோரை உரு­வாக்­கவும், ஊக்­கு­விக்­கவும், திறன் வளர்ப்பு திட்­டங்­களை, இந்­திய நிறு­வ­னங்கள் செயல்­ப­டுத்த வேண்டும்.
முக்கியத்துவம்அவற்றின் மூலம், சர்­வ­தேச அளவில் பெருகி வரும் ஆளுமை திறன், தொழில்­நுட்ப மாற்­றங்கள் ஆகிய சவால்­களை சமா­ளிக்க கூடிய, தலைமை பண்­பா­ளர்­களை உரு­வாக்க முடியும்.இந்த ஆய்வில், சர்­வ­தேச நிறு­வ­னங்கள், அவற்றின் செயல்­திட்ட வடி­வ­மைப்­புக்கு முன்­னு­ரிமை அளித்­துள்­ளன. அடுத்து, புதிய சிந்­த­னை­யுடன் நிறு­வ­னத்தை முன்­னெ­டுத்துச் செல்­வது; பணி­யாளர் நிர்­வாகம் ஆகி­ய­வற்­றுக்கு முக்­கி­யத்­துவம் அளித்­துள்­ளன. இந்த ஆய்வில், சர்­வ­தேச நிறு­வ­னங்­களை பொறுத்­த­வரை, தலைமை பொறுப்பில் ஆள் பற்­றாக்­குறை பிரச்னை, நான்­கா­வது இடத்தை பிடித்­துள்­ளது. இவ்­வாறு அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
தலைமை பொறுப்பு, உயர்மட்ட பதவி, இரண்டாம் நிலை பத­வி­களில், தகு­தி­யான ஆட்­க­ளுக்கு பற்­றாக்­குறை உள்­ள­தாக, 68 சத­வீதம் பேர் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)