தலைமை பத­வி­க­ளுக்கு ஆள் பற்­றாக்­குறை இந்­திய நிறு­வ­னங்கள் கவலை; ஆய்­வ­றிக்கை தகவல்தலைமை பத­வி­க­ளுக்கு ஆள் பற்­றாக்­குறை இந்­திய நிறு­வ­னங்கள் கவலை; ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.28 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.28 ...
பெண்களுக்கான நிதி வழிகாட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2016
07:51

எல்லா விஷ­யங்­க­ளையும் தாங்­களே சமா­ளிக்கும் ஆற்றல் பெற்­றுள்ள பெண்கள் நிதி விஷ­யங்­களை மட்டும் தங்கள் கட்­டுப்­பாட்டில் எடுத்­துக்­கொள்­ளாமல் தயக்கம் காட்­டு­வது ஏன் என்று கேள்வி எழுப்பும் சூசே ஆர்மன், வள­மான நிதி எதிர்­கா­லத்­திற்கு பணத்­து­ட­னான தங்கள் உறவை சீர்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் என்­கிறார். இதற்­கான வழி­களை விவ­ரிக்கும் வகையில் பெண்­க­ளுக்­கான பிரத்­யேக நிதி வழி­காட்டி நுாலாக எழு­தி­யுள்ள, ‘வுமன் அண்ட் மணி’ புத்­த­கத்தில், நிதி வெற்­றியை அளிக்க கூடிய எட்டு முக்­கிய குணங்­களை செல்வ செழிப்­பான பெண்­களின் குணங்­க­ளாக விவ­ரிக்­கிறார்: சம­நிலை, இணக்கம்: இணக்­கமும், சம­நி­லையும் முக்­கிய குணங்­க­ளாகும். இந்த இரண்டு குணங்­களும் ஒன்­றுக்கு ஒன்று தொடர்­பு­டை­யது. இது நீங்கள் நினைப்­பது, உணர்­வது மற்றும் பேசு­வ­தற்கும், செயல்­ப­டு­வ­தற்கும் இடை­யி­லான இணக்­க­மான தொடர்­பாகும். எண்ணம், செயல் மற்றும் பேச்­சு­களை ஒரே நேர்க்­கோட்டில் வைத்தி­ருப்­பது சம­நி­லையை அளிக்கும். துணிவு: உங்கள் தேவைக்­கேற்ற புத்­தி­சா­லித்­த­ன­மான முடி­வு­களை மேற்­கொள்ள அறிவும், துணிவும் அவ­சியம். துணிச்சல் இருக்­கும்­போது நீங்கள் அச்­சத்­திற்கு அடி­மை­யா­வ­தில்லை.தாராளம்: சரி­யான நேரத்தில், சரி­யான ஒன்றை சரி­யா­ன­வ­ருக்கு அளிப்­பது தாராள பண்பாகும். கொடுப்­பதில் மிகப்­பெ­ரிய சக்தி இருக்­கி­றது. நேர்­மை­யான தன்­மை­யுடன், எதையும் எதிர்­பார்க்­காமல் கொடுக்கும் போது, அது மிகுந்த திருப்தி அளிக்­கி­றது. எப்­படி கொடுக்­கி­றீர்கள், எதற்­காக கொடுக்­கி­றீர்கள் என்­பதை அறிந்­தி­ருக்­கவும். மகிழ்ச்சி: வளம் மற்றும் திருப்­தியை உணரும் மன­நிலை இது. ஆனால், மகிழ்ச்சி என்­பது ஆடம்­பரம் அல்ல; இது உண்­மை­யான வளத்தின் அவ­சி­ய­மாகும். மகிச்­சி­யுடன் இருக்­கும்­போது, வாழ்க்­கையில் உண்­மை­யான குதுா­க­லத்தை உணர்­கி­றீர்கள். உங்கள் வாய்ப்­புகள் பற்றி நம்­பிக்கை கொள்­ளுங்கள். அறிவு: புத்­தி­சா­லித்­த­ன­மான முடி­வுகள் மேற்­கொள்ள தேவை­யான அறிவு மற்றும் அனு­ப­வமே உங்­க­ளுக்­கான ஞான­மாகும். கூச்சல் குழப்­பங்­க­ளுக்கு மத்­தியில் சரி­யா­ன­வற்றை அடை­யாளம் காண இது உத­வு­கி­றது. இந்த ஆற்றல் உள்ள பெண்கள் தவ­று­களை கண்­டு­ணர்ந்து, அவற்றை சரி செய்து கொள்ள உத­வு­கி­றது.துாய்மை: தெளிவு, துாய்மை மற்றும் துல்­லி­ய­மான மன­நிலை இது. எதிலும் ஒரு ஒழுங்கை பெற்­றி­ருப்­பதன் மூலம் அடை­யலாம். நீங்கள் வீட்டை பரா­ம­ரிக்கும் விதத்தில் இருந்து முக்­கிய ஆவ­ணங்­களை வைத்­தி­ருக்கும் விதம் வரை துாய்­மையை உணர்த்­து­கின்­றன. பில்­களை செலுத்­து­வது முதல் கிரெடிட் கார்டு பழக்கம் வரை எல்­லா­வற்­றிலும் ஒழுங்கை கொண்டு வாருங்கள். அழகு: மனம் மற்றும் ஆன்­மா­வுக்கு மகிழ்ச்­சியை கொடுக்க கூடிய குணங்­களே அழகை அளிக்­கி­றது. இது உள்­ளி­ருந்து ஒளிர்­வ­தாகும். இந்த மற்ற குணங்­களை பெற்­றி­ருப்­பதன் மூலம் அழகு மற்றும் நம்­பிக்கை உங்­க­ளுக்குள் உண்­டா­கி­றது. உங்­க­ளுக்குள் பாது­காப்­பாக உண­ருங்கள். உங்­க­ளுக்குள் ஆற்றல் இருப்­பதை உண­ருங்கள். இந்த குணங்­களின் சம­நி­லையை உண­ரும்­போது உண்­மை­யான செல்­வத்­தையும், வளத்­தையும் உணர முடியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)