பதிவு செய்த நாள்
31 மே2016
07:28
புதுடில்லி : ஹட்கோ, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உட்பட, நான்கு நிறுவனங்களின் பங்கு வெளியீட்டின் மூலம், 8,000 கோடி ரூபாய் நிதி திரட்ட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசுக்கு, புதிய திட்டங்களை நிறைவேற்ற அதிகளவில் நிதி தேவைப்படுகிறது. இதையடுத்து, 2016 – 17ம் நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வெளியிட்டு, 56 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுத்துறையை சேர்ந்த ஹட்கோ, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ராஷ்ட்ரீய இஸ்பத் நிகாம், கொச்சின் ஷிப்யார்டு ஆகிய நான்கு நிறுவனங்களில், தன் வசம் உள்ள பங்குகளை வெளியிட்டு, 8,000 கோடி ரூபாய் நிதி திரட்ட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, மத்திய அரசு, விரைவில் துவங்கும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|