பதிவு செய்த நாள்
31 மே2016
07:29
புதுடில்லி : போர்டு நிறுவனம், தன் சேவை குறித்த விளம்பரங்களுக்காக, 200 கோடி ரூபாய் செலவு செய்ய முடிவு செய்துள்ளது. கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் போர்டு நிறுவனத்திற்கு, தமிழகம், கேரளா, டில்லி, தெலுங்கானா, கர்நாடகா என நாடு முழுவதும், டீலர்கள் உள்ளனர். தற்போது, மாருதி உள்ளிட்ட பல கார் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய வகை கார்களை அறிமுகம் செய்து வருவதால், போர்டு நிறுவனத்திற்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இவற்றை சமாளிக்கும் விதமாக, போர்டு சமீபத்தில் தன், எஸ்.யூ.வி., மாடல் காரின் விலையை குறைத்தது. அடுத்தகட்டமாக, தன் பிராண்டை பிரபலப்படுத்தும் பிரசார வகைக்காக, 200 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளது. இந்த நிதியின் மூலம் தன் சேவை, தரம் உள்ளிட்டவை தொடர்பாக, வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, போர்டு முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|