பதிவு செய்த நாள்
31 மே2016
07:31
கட்டாக் : சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய், விதிகளை மீறி, முதலீடுகளை திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு, இரு ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், தற்போது, ‘பரோல்’லில் வெளிவந்துள்ளார். இவர், ஒடிசாவில், தன் சீட்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் ஏஜன்டுகளை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் பேச்சை கேட்க, கட்டாக் நகரில் உள்ள, நேரு உள்விளையாட்டு அரங்கில், 4,000க்கும் அதிகமானோர் குழுமியிருந்தனர். இந்நிலையில், கட்டாக் காவல் துறை, சுப்ரதா ராயின் கூட்டத்திற்கு, திடீரென அனுமதி மறுத்து, 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அரங்கில் கூடியிருந்தோரை, போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த கூட்டத்தில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், சுப்ரதா ராயை தாக்கலாம் என, ரகசிய தகவல் வந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்துஉள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|