பதிவு செய்த நாள்
01 ஜூன்2016
10:58
ராமேஸ்வரம்: இறால் விலை வீழ்ச்சியால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். மீன்பிடி தடைகாலம் முடிவடைவதற்குள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 29ம் தேதி இரவு கடலுக்குள் சென்றனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரைதிரும்பினர். ஒவ்வொரு படகிலும் சராசரியாக 100 முதல் 150 கிலோ வரை இறால் மீன்கள் கிடைத்தது. இவற்றை தூத்துக்குடியைச் சேர்ந்த இறால் மீன் ஏற்றுமதியாளர்கள் ஒரு கிலோ ரூ.500க்கு கொள்முதல் செய்தனர். மீன்பிடி தடைகாலத்துக்கு முன் கிலோ ரூ.600க்கு விற்பனையான இறால் மீன் கிலோ ரூ.100 வரை விலை வீழ்ச்சியடைந்ததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் போஸ் கூறியதாவது:தடை காலம் முடிவதற்கு முன்பே மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதால் இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட மீன்கள் கெட்டுப்போனது. இதனால் தான் வியாபாரிகள் விலையை குறைத்து கொள்முதல் செய்தனர். விலை வீழ்ச்சியால் ஒவ்வொரு படகிற்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|