பதிவு செய்த நாள்
06 ஜூன்2016
15:43
புதுடில்லி : வெளிநாடுகளுக்கு செல்வோர், பாஸ்போர்ட், விசா என பல்வேறு ஆவணங்களை சரிபார்ப்பதற்காக, பல மணி நேரம் முன்னதாக விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக, நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதை தவிர்க்க, அடிக்கடி வெளிநாடுகள் செல்பவர்களுக்கும், திரையுலகினர், பிரபலங்கள், பிரபல தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கும் இதில் இருந்து விலக்கு அளித்து, இந்த ஆவண சரிபார்ப்பை எளிமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த வசதியை பெறுபவர்கள் மீது, குற்ற வழக்குகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க, உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. எந்தெந்தப் பிரிவினருக்கு இதுபோன்ற சலுகை அளிக்கலாம் என்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த புதிய முறையின்படி, சலுகை அளிக்கப்படுபவர்களுடைய ஆவணங்கள், முன்னதாகவே சரி பார்க்கப்படும். விமான நிலையம் சென்றதும், இதற்காக அமைக்கப்பட உள்ள கருவியில், தங்களுடையவிவரங்களை பதிவு செய்தால் போதும்; சில நிமிடங்களில் ஆவண சரிபார்ப்பு உறுதி செய்யப்படும்.அமெரிக்காவில் இதுபோன்ற வசதி உள்ளது. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு திட்டம் என்ற இந்த திட்டத்தின் கீழ், சர்வதேச அளவில் குறிப்பிட்ட சிலருக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கும் இந்த சலுகையை அளிக்கும் வகையில், இந்தியா - அமெரிக்கா இடையே நேற்று முன்தினம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், முன்னாள் மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோ ருக்கு இந்த சலுகை அளிக்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|