தென்­னிந்­தி­யாவில் சிமென்ட் தேவை அதிகரிக்கும்தென்­னிந்­தி­யாவில் சிமென்ட் தேவை அதிகரிக்கும் ... ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.66.90 ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.66.90 ...
சில்­லரை விற்­ப­னையில் சிறப்பான வளர்ச்சி; 2வது இடத்­தை எட்டிப்பிடித்தது நம் இந்­தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
05:12

சிங்­கப்பூர் : ‘இந்­தாண்­டுக்­கான, சர்­வ­தேச சில்­லரை விற்­பனை வளர்ச்சி குறி­யீட்டில், இந்­தியா, இரண்­டா­வது இடத்­திற்கு முன்­னேறி உள்­ளது’ என, லண்­டனைச் சேர்ந்த, ஏ.டி.கியர்னி நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
இந்­நி­று­வனம், ஆண்­டு­தோறும், 30 வளரும் நாடு­களின் சில்­லரை விற்­பனை குறித்து ஆய்வு செய்து, ‘ஜி.ஆர்.டி.ஐ.,’ என்ற குறி­யீட்டு பட்­டி­யலை வெளி­யிட்டு வரு­கி­றது. இதில், கடந்த ஆண்டு, 15வது இடத்தில் இருந்த இந்­தியா, இந்­தாண்டு, 13 இடங்கள் முன்­னேறி, இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது. ‘இந்த அதி­ரடி முன்­னேற்­றத்­திற்கு, சுல­ப­மாக தொழில் துவங்க, பிர­தமர் மோடி அரசு எடுத்த முயற்­சிகள், உள்­நாட்டு உற்­பத்­தியில் ஏற்­பட்­டுள்ள வளர்ச்சி, அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­களை தெளி­வு­ப­டுத்­தி­யது உள்­ளிட்ட அம்­சங்கள் காரணம்’ என, ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
‘சிங்கிள் பிராண்டு’அதில் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது: இந்­தி­யாவில், சில்­லரை விற்­பனை சந்­தையின் மதிப்பு, 2013 – 15 வரை, ஆண்­டுக்கு, 8.8 சத­வீத சரா­சரி வளர்ச்­சி­யுடன், 1 லட்சம் கோடி டாலரை தாண்­டி­யுள்­ளது.இத்­து­றையில் ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­புகள் உள்­ளதால், வெளி­நாட்டு நிறு­வ­னங்கள், ஆர்­வத்­துடன் முத­லீடு செய்­கின்­றன. மேலும், அதி­க­ளவில் சர்­வ­தேச நிறு­வ­னங்­களை ஈர்க்கும் நோக்கில், ‘சிங்கிள் பிராண்டு’ சில்­லரை விற்­ப­னையில், அன்­னிய முத­லீட்டு விதி­மு­றைகள் வெகு­வாக தளர்த்­தப்­பட்டு உள்­ளன.
உல­க­ளவில், மிக வேக­மாக பொரு­ளா­தார வளர்ச்சி கண்டு வரும் நாடாக, இந்­தியா உரு­வெ­டுத்து உள்­ளது. இந்த வளர்ச்­சிக்கு, மேலும் வலுச்­சேர்க்கும் வித­மாக, மின் வணிகம் விளங்கும். உலகின், இரண்­டா­வது மிகப்­பெ­ரிய இணை­ய­தள சந்­தை­யாக, இந்­தியா உள்­ளது. பெருகி வரும், ‘ஸ்மார்ட் போன்’ பயன்­பாடு, கிரா­மங்­களில் வேக­மாக பரவும், இணைய இணைப்பு வசதி போன்­ற­வற்றால், மின் வணிக துறையின் வளர்ச்சி சிறப்­பாக இருக்கும்.
பன்­னாட்டு நிறு­வ­னங்கள்இந்­தி­யர்கள், ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்­கு­வது அதி­க­ரித்து வரு­வதால், இத்­து­றையில் ஏரா­ள­மான நிறு­வ­னங்கள் பெருகி வரு­கின்­றன. அத்­த­கைய நிறு­வ­னங்­க­ளுக்கு, பன்­னாட்டு நிறு­வ­னங்கள் தாரா­ள­மாக நிதி­யு­தவி வழங்­கு­கின்­றன. இருந்­த­போ­திலும், தொழி­லாளர் சட்­டங்கள், சிக்­க­லான விதி­மு­றைகள், ரியல் எஸ்டேட் பிரச்­னைகள் போன்­றவை, சில்­லரை விற்­ப­னையில் கள­மி­றங்க துடிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, தடைக்­கற்­க­ளாக உள்­ளன. அவற்றில், மத்­திய அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
தொழி­லாளர் சட்­டங்கள், சிக்­க­லான விதி­மு­றைகள், ரியல் எஸ்டேட் பிரச்­னைகள் போன்­றவை, சில்­லரை விற்­ப­னையில் கள­மி­றங்க துடிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, தடைக்­கற்­க­ளாக உள்­ளன

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)