வங்­கிகள் இணைப்பு: மத்­திய அரசு அதி­ரடி திட்டம்வங்­கிகள் இணைப்பு: மத்­திய அரசு அதி­ரடி திட்டம் ... பிரெக்ஸிட் ஓட்டெடுப்பு : ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி பிரெக்ஸிட் ஓட்டெடுப்பு : ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி ...
தக்­கா­ளி விலை உயர்வால்‘டொமேட்டோ புரீ, கெட்ச்அப்’ விற்­பனை ‘ஜோர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2016
07:05

புது­டில்லி : தக்­காளி விலை உயர்வு கார­ண­மாக, அதன் பயன்­பாடு குறைந்­துள்­ளது. அதே­ச­மயம், பிர­பல நிறு­வ­னங்­களின் ‘டொமேட்டோ புரீ, கெட்ச்அப்’ போன்ற தக்­காளி கூழ், தக்­காளி சட்னி உள்­ளிட்ட, உட­னடி உணவு வகை­களின் விற்­பனை, கடந்த ஒரு மாதத்தில், 40 சத­வீதம் உயர்ந்­துள்­ள­தாக, ‘அசோசெம்’ ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
கர்­நா­டகா, ஆந்­திரா, தெலுங்­கானா, மத்­திய பிர­தேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநி­லங்கள், தக்­காளி உற்­பத்­தியில் சிறந்து விளங்­கு­கின்­றன. நடப்பு, வேளாண் பரு­வத்தில், நாட்டின் தக்­காளி உற்­பத்தி, 1.83 கோடி டன்­னாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது, கடந்த ஆண்டு, 1.64 கோடி டன்­னாக இருந்­தது. தக்­காளி உற்­பத்தி அதிகம் இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்ட போதிலும் கடந்த ஒரு மாதத்தில், வரத்து குறைவால், தக்­காளி விலை, கிடு கிடு­வென உயர்ந்து, ஒரு கிலோ, 100 ரூபாயை எட்­டி­யது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள், தக்­காளி வாங்­கு­வதை குறைத்து, அதற்கு பதி­லாக, தக்­கா­ளியில் தயா­ரிக்­கப்­பட்ட, டொமேட்டோ புரீ, கெட்ச்அப் ஆகி­ய­வற்றை வாங்கி, சமை­ய­லுக்கு பயன்­ப­டுத்த துவங்­கி­யுள்­ளனர். இதனால், இவ்­வகை பொருட்­களின் விற்­பனை, கடந்த ஒரு மாதத்தில், 40 சத­வீதம் உயர்ந்­துள்­ளது.
சமையலில்...டில்லி, மும்பை உள்­ளிட்ட நக­ரங்­களில், 1,500க்கும் அதி­க­மான இல்­லத்­த­ர­சி­க­ளிடம், அசோசெம் நடத்­திய ஆய்வில், அவர்கள் தக்­கா­ளிக்கு பதி­லாக, டொமேட்டோ புரீ, கெட்ச்அப் போன்­ற­வற்­றையும், வெண்­டைக்காய், பூசணி போன்ற காய்­க­ளையும் சமை­ய­லுக்கு பயன்­ப­டுத்­து­வது தெரி­ய­வந்­துள்­ளது. பலர், சமை­யலில், தக்­கா­ளிக்குபதி­லாக புளி, மாங்காய் ஆகி­ய­வற்றை உப­யோ­கிப்­ப­தாக கூறி­யுள்­ளனர்.
அதிக இருப்புஒரு கிலோ தக்­கா­ளியின் விலையை விட, டொமேட்டோ புரீ, கெட்ச்அப் ஆகி­ய­வற்றின் விலை குறை­வாக உள்­ளதால், அவற்றை, மக்கள் அதிக அளவில் வாங்கி வரு­கின்­றனர். இதனால், கடந்த இரு வாரங்­களில், அப்­பொ­ருட்­களின் விற்­பனை, திடீ­ரென உயர்ந்­துள்­ள­தாக, கடைக்­கா­ரர்கள் தெரி­வித்­துள்­ளனர். தேவை அதி­க­மாக உள்­ளதால், டொமேட்டோ புரீ, கெட்ச் அப் உள்­ளிட்ட உணவுப் பொருட்­களை, வழக்­கத்தை விட அதி­க­மாக இருப்பு வைத்­துள்­ள­தாக, அவர்கள் கூறி­யுள்­ளனர்.
ஜூன் – செப்., வரை­யி­லான காலத்தில் தக்­காளி வரத்து குறைந்து, அதன் விலை சற்று உயர்­வது வழக்கம். இந்­தாண்டு, தென்­னிந்­தி­யாவில், பருவம் தவ­றிய மழையால், பூக்கும் பரு­வத்தில் இருந்த தக்­காளி பயிர்கள் பாழாகி, அதன் உற்­பத்தி குறைந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)