பதிவு செய்த நாள்
24 ஜூன்2016
10:22
மும்பை : ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நடத்தப்பட்ட பிரெக்ஸிட் ஓட்டெடுப்பில், பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பெருவாரியான பேர் கூறியிருப்பதால் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதாக தகவல் வந்துள்ளது. இதனால் உலகளவில் பங்குச்சந்தைகள் மற்றும் கரன்சிகளின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளன. இது இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 96 காசுகள் சரிந்து ரூ.68-ஐ கடந்துள்ளது. மேலும் வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கும் டாலரின் தேவை அதிகளவில் தேவைப்படுவதால் இந்த சரிவு மேலும் அதிகரித்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|