பதிவு செய்த நாள்
25 ஜூன்2016
07:30
புதுடில்லி : பாண்டலுான்ஸ் நிறுவனம், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜவுளி நிறுவனமான, ‘இஸபெல் லண்டன்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த பாண்டலுான்ஸ் நிறுவனம், பேஷன் மற்றும் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 145 கடைகள் உள்ளன. இந்த நிலையில், பாண்டலுான்ஸ், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, ‘இஸபெல் லண்டன்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், இஸபெல் நிறுவனத்தின் ஆடைகள், பாண்டலுான்ஸ் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதுகுறித்து, பாண்டலுான்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, பெண்களுக்கான ஆடை சந்தை, விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. இஸபெல் லண்டன், இங்கிலாந்தில், பெண்களின் ஆடை தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. எனவே, அந்த நிறுவனத்தின் ஆடைகளை, எங்கள் கடைகளில் விற்பனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|