பிரிட்டன் பொது ஓட்டெ­டுப்பு: ரிசர்வ் வங்கி அறிக்கைபிரிட்டன் பொது ஓட்டெ­டுப்பு: ரிசர்வ் வங்கி அறிக்கை ... உயர் கல்வியில் பெற்றோர் ஆர்வம் உயர் கல்வியில் பெற்றோர் ஆர்வம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
லட்­சா­தி­ப­தி­யாக்கும் வழிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
07:32

உங்கள் முத­லீட்டு தேர்­வு­களை விட, சேமிக்கும் பழக்கம் தான் முக்­கி­ய­மா­னவை என்­கிறார், ஆண்ட்ரூ ஹல்லம். செல்­வந்­த­ரா­வ­தற்­கான வழி வர­வுக்குள் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­திலும், கடன் வலையில் சிக்­காமல் இருப்­ப­திலும், உப­ரியை முத­லீடு செய்­வ­திலும் தான் இருக்­கி­றது என்று கூறு­பவர், ‘மில்­லியனர் டீச்சர்’ எனும் புத்­த­கத்தில் வள­மான நிதி வாழ்க்­கைக்­கான வழி­களை விவ­ரிக்­கிறார்.
கனடா நாட்டைச் சேர்ந்த ஆங்­கில ஆசி­ரி­ய­ரான ஹல்லம், சுய­மாக சம்­பா­தித்து இளம் வயதில் லட்­சா­தி­ப­தி­யா­னவர். அந்த அனு­ப­வத்தின் மூலம் பெற்ற பாடங்­களை அவர் மற்­ற­வர்­க­ளுக்­காக விளக்­கி­யுள்ளார்.
* பெரும்­பா­லானோர் தங்­களை செல்­வந்­த­ராக தோன்றச் செய்­வ­தற்­காக செலவு செய்­கின்­றனர். கடன் வாங்கி சொகுசு கார்­களில் பயணம் செய்­கின்­றனர்; விலை உயர்ந்த பொருட்­களை வாங்கி பயன்­ப­டுத்­து­கின்­றனர். இவை, ஒரு­வரை பணக்­காரர் போல உணரச் செய்­யலாம். ஆனால், பணக்­கா­ர­ராக ஆவ­தற்கு உத­வாது. உண்­மையில், எதிர்­ம­றை­யான பலனே உண்­டாகும். நிஜ­மான லட்­சா­தி­ப­திகள் எப்­படி செலவு செய்­கின்­றனர் என்­பது உங்­களை வியப்பில் ஆழ்த்­தி­விடும். லட்­சா­தி­ப­திகள் ஆடம்­பர செல­வுகள் செய்­வ­தில்லை. சிக்­க­ன­மாக இருந்து செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­துங்கள். வரு­வாய்க்குள் செலவுகள் இருக்க வேண்டும். வரு­வாய்க்குள் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்தி, உப­ரியை சரி­யான முத­லீடு செய்­வது தான், செல்­வந்­த­ரா­வ­தற்­கான உறு­தி­யான வழி
* காலமும், கூட்டு வட்­டியும் தான் உங்­க­ளது மிகச்­சி­றந்த நண்பன். முடிந்த வரை இளம் வயதில் முத­லீட்டை துவக்­குங்கள். இதன் மூலம் நீண்ட கால நோக்கில் கூட்டு வட்­டியின் பலனை பெறலாம். முத­லீட்டு வல்­லு­ன­ரான வாரென் பப்பே இந்த முறையை தான் பின்­பற்­றினார். அவரைப் போலவே நீங்­களும் பின்­பற்றி பலன் பெறலாம். இளம் வயதில் முத­லீடு செய்யத் துவங்­கு­வது தான் உங்­க­ளுக்கு நீங்கள் அளிக்கக் கூடிய மிகச்சிறந்த பரி­சாக இருக்கும்
* பொருட்­களை தள்­ளு­ப­டியில் அல்­லது விலை குறையும் போது வாங்­கு­கிறோம். ஆனால், பங்­கு­களை பொறுத்­த­வரை அவற்றின் விலை குறையும் போது குறை­வாக வாங்­கு­கிறோம்; விலை அதி­க­மாகும் போது அதிகம் வாங்­கு­கிறோம். சந்­தையின் ஏற்ற இறக்­கத்தால் பாதிக்­கப்­ப­டாமல் முடிவு எடுக்க வேண்டும். சரா­சரி முத­லீட்­டா­ளர்­க­ளுக்கும், அனு­பவம் வாய்ந்த முத­லீட்­டா­ளர்­க­ளுக்கும் வேறு­பா­டுகள் இருக்­கின்­றன. சரா­சரி முத­லீட்­டா­ளர்கள், பங்­கு­களின் விலை சரியும் போது மோச­மாக உணர்­கின்­றனர். ஆனால், அனு­பவம் வாய்ந்த முத­லீட்­டா­ளர்கள், சரிந்த பங்­கு­களில் மதிப்பை பார்க்­கின்­றனர்
* உங்­க­ளுக்கு சம அள­வி­லான உணவு தேவை. முத­லீட்­டிற்கும் இது பொருந்தும். பங்­குகள் உள்­ளிட்ட முத­லீ­டு­கள் பர­வ­லாக அமைய வேண்டும். போது­மான அளவு பத்­தி­ரங்­க­ளிலும் முத­லீடு செய்ய வேண்டும்
* அதிக வட்டி போன்­ற­வற்­றுக்கு ஆசைப்­பட்டு செயல்­படக் கூடாது. சுல­ப­மாக பணம் சேரும் வழி என்று எதுவும் இல்லை.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)