பதிவு செய்த நாள்
27 ஜூன்2016
18:04
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து தள்ளாட்டத்துடன் தான் காணப்படுகின்றன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் பங்குச்சந்தைகள் கடந்த வெள்ளியன்று கடும் சரிவை சந்தித்தன. இந்திய பங்குச்சந்தைகள் மட்டுமின்றி உலகளவிலும் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இந்தச்சூழலில் வர்த்தகவாரத்தின் முதல்நாளான இன்றும்(ஜூன் 27-ம் தேதி) பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தன. இருப்பினும் வர்த்தகம் முடியும் தருவாயில் சில முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததால் பங்குச்சந்தைகள் சிறு ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 5.25 புள்ளிகள் உயர்ந்து 26,402.96-ஆகவும், நிப்டி 6.10 புள்ளிகள் உயர்ந்து 8,094.70-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|