பதிவு செய்த நாள்
29 ஜூன்2016
07:34
புதுடில்லி : மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன், ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, நான்கு அல்லது ஐந்து பெரிய வங்கிகளின் கீழ், இதர வங்கிகளை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, சர்வதேச தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2012 முதல், பொது துறை வங்கிகளின், மறுசீரமைக்கப்பட்ட வாராக்கடன் அதிகரித்து வருகிறது. எந்தவொரு வங்கிக்கும், தன் கடன் சுமையுடன், இணைய உள்ள பிற வங்கிகளின் கடன் சுமையை சமாளிக்கும் அளவிற்கு வலுவான நிதியாதாரம் இல்லை. மத்திய அரசின் நிதி, பொது துறை வங்கிகளில் அதன் பங்கு மூலதனத்தை உயர்த்த ஓரளவிற்கே உதவி புரியும். தற்போதைய சூழலில், நான்கு அல்லது ஐந்து பெரிய வங்கிகளின் கீழ் சிறிய வங்கிகளை கொண்டு வருவதில், நீண்ட கால பயன்களை விட, இடர்ப்பாடுகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|