பதிவு செய்த நாள்
29 ஜூன்2016
17:39
மும்பை : ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால் சில தினங்கள் இந்தியா உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இருப்பினும் நேற்று முதல் பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகி உயர்வுடனேயே முடிந்தன.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், ரூபாயின் மதிப்பு உயர்வு, பருவமழை தீவிரமடைந்திருப்பது, வருகிற பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என நம்பப்படுவது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 29-ம் தேதி) உயர்வுடன் முடிந்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.84 புள்ளிகள் உயர்ந்து 26,740.39-ஆகவும், நிப்டி 76.15 புள்ளிகள் உயர்ந்து 8,204-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|