பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
01:50
புதுடில்லி : வரும் ஆகஸ்ட், 5ம் தேதி, இந்தியா, சீனா உள்ளிட்ட, 16 நாடுகளை உள்ளடக்கிய, ஆர்.சி.இ.பி., எனப்படும், பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு அமைப்பின் மாநாடு, லாவோசில் நடைபெறுகிறது. இதில், உறுப்பு நாடுகளின் வர்த்தக துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.அப்போது, மூன்றடுக்கு வரிச் சலுகை திட்டம், சேவை துறை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது. சமீபத்தில் ஆக்லாந்தில், ஆர்.சி.இ.பி., நாடுகளிடையே, 12வது சுற்று பேச்சு நடைபெற்றது. அதில், உறுப்பு நாடுகள் இடையிலான, 99 சதவீத சரக்குகளின் பரிமாற்றத்திற்கு, வரி விலக்கு அளிக்க வேண்டும் என, சில நாடுகள் கோரிக்கை விடுத்தன. அதை, இந்தியா உட்பட, பல நாடுகள் ஏற்கவில்லை. அதேசமயம், ‘ஆசியான்’ அமைப்பில் உள்ள, 10 நாடுகள் உடனான வர்த்தகத்தில், 80 சதவீத சரக்குகளுக்கு வரி விலக்கு அளிக்க, இந்தியா முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|