பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
23:45
புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வீரப்பமொய்லி தலைமையிலான, நிதி துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு முன்னிலையில், நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர், வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை, ‘பிரிக்ஸிட்’ தாக்கம் உள்ளிட்டவை குறித்து விவரித்தார். தனியார் வங்கிகள் தாராளமாக கடன் வழங்கும் நிலையில், போதிய நிதி இருந்தும், பொதுத் துறை வங்கிகள், கடன் வழங்கத் தயங்குவதையும், அதற்கான தீர்வையும் அவர் விளக்கினார். இதையடுத்து, வங்கிகளின் வாராக்கடனை கட்டுப்படுத்த, ரகுராம் ராஜன் எடுத்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நிலைக் குழு, ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக் காலம் குறித்து கருத்து கேட்டது.
அதற்கு, ‘‘ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு மூன்று ஆண்டு காலம் மிகக் குறுகியது. அமெரிக்க மத்திய வங்கி தலைவர், துணை தலைவர் ஆகியோர், நான்கு ஆண்டுகள் பதவி வகிக்கின்றனர்; தேவைப்பட்டால் மீண்டும் பணி அமர்த்தப்படுகின்றனர். இத்தகைய சர்வதேச நடைமுறையை, இந்தியா பின்பற்ற வேண்டும்,’’ என, ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|