பதிவு செய்த நாள்
02 ஜூலை2016
08:31
புவனேஸ்வர் : ‘‘நாட்டின் அலுமினிய துறையை ஊக்குவிப்பதற்காக, விரைவில் அலுமினிய மேம்பாட்டு குழு அமைக்கப்படும்,’’ என, மத்திய சுரங்க அமைச்சக செயலர் பல்விந்தர் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: வருங்காலத்தில், உலோக உலகை ஆட்சி செய்யப் போவது அலுமினியம் தான். உலகளவில், அலுமினியம் தயாரிப்பதற்கான, ‘பாக்சைட்’ மூலப்பொருள் வளத்தில், இந்தியா, ஏழாவது இடத்தில் உள்ளது.
இடைவெளிஆந்திரா, ஒடிசா மாநிலங்களில், பாக்ஸைட் வளம் ஏராளமாக உள்ளது. நாட்டின் அலுமினியம் பயன்பாடு, 25 சதவீதமாக உள்ள நிலையில், அதன் உற்பத்தி, 19 சதவீத அளவிற்கே உள்ளது. அலுமினியம் தேவைக்கும், அளிப்பிற்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் பெருகி வருகையில், அலுமினிய பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, சுரங்கத் துறை அமைச்சர் அல்லது செயலர் தலைமையில், அலுமினிய துறையை மேம்படுத்த, விரைவில் குழு அமைக்கப்படும். இக்குழு, பல்வேறு துறையினருடன் ஆலோசித்து, அலுமினிய துறையின் வளர்ச்சி தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, உரிய ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை வகுக்கும்.
அதிகரிக்கும் தேவைஇந்தியாவில், 100 ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம், சரக்கு ரயில் போக்குவரத்து திட்டம் உட்பட, ஏராளமான அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அலுமினியத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப உற்பத்தியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|