சவுத் இந்­தியன் பாங்க்லாபம் ரூ.95 கோடிசவுத் இந்­தியன் பாங்க்லாபம் ரூ.95 கோடி ... எச்.டி.எப்.சி., வங்கிவருவாய் ரூ.16,516 கோடி எச்.டி.எப்.சி., வங்கிவருவாய் ரூ.16,516 கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.23,000 கோடி மத்திய அரசு நிதியுதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2016
11:43

புதுடில்லி : கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், பொதுத்துறை வங்கிகளின், கடன் வளர்ச்சி வீதம் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது; மேலும், வங்கிகள் அளித்த, 77 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூலிக்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னைகளில் இருந்து மீட்கும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 13 பொதுத்துறை வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்க, 23 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. கொடுத்த கடன் தொகையும், அதற்கான வட்டியும் வசூலிக்கப்படாமல்,
வங்கிகள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்து வருகின்றன. வட்டி வீதம் அதிகமாக உள்ளதாலும், தொழில் துறை சிறப்பான வளர்ச்சியை எட்ட முடியாததாலும், வங்கிகள் அளிக்கும் கடன்களின் வளர்ச்சி வீதம், 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. மேலும், தனியார் வங்கிகளுடன் போட்டியிட முடியாத சூழலில், பொதுத்துறை வங்கிகள் உள்ளன.மேலும், கோடிக்கணக்கில் கடன் பெற்ற பலர் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருவதால், பொதுத்துறை வங்கிகள் கடும் நிதிச் சிக்கலிலும் உள்ளன.
இந்நிலையில் மத்திய அரசு, 13 பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்காக, 22 ஆயிரத்து, 915 கோடிரூபாய் வழங்கி உள்ளது. இதில், அதிகபட்சமாக, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கிக்கு, 7,575 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, 3,101 கோடி ரூபாயும்; பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 2,816 கோடி ரூபாயும் வழங்கப்படும். இதன் மூலம், பொதுத்துறை வங்கிகளில், அரசின் பங்கு விகிதம் அதிகரிக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும். வங்கிகள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகள் மற்றும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் நிதி பெரும் தீர்வாக அமையும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மத்திய நிதி அமைச்சகம் கூறியதாவது :மத்திய அரசு வழங்கும் நிதியால், பொதுத்துறை வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்து, பங்குச் சந்தையில் கூடுதல் நிதியாதாரங்களை திரட்ட வழி பிறக்கும். வங்கிகளின் நிர்வாகத்தின் மேம்பாடு, கடன் மற்றும் முதலீடு வளர்ச்சி, சிக்கன நடவடிக்கைகள் போன்றவற்றை பொறுத்து, வரும் காலங்களில், கூடுதல் நிதியை, வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கும்.
இவ்வாறு நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)