பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
07:27
முதலீடு வாய்ப்புகள் பற்றி பேசப்படும் போது, வைப்பு நிதி, பங்குகள், பத்திரங்கள் ஆகியவற்றுடன் மியூச்சுவல் பண்ட்கள் பற்றியும் தவறாமல் குறிப்பிடப்படுகின்றன. மியூச்சுவல் பண்ட்களில் பலவிதமான திட்டங்கள் இருக்கின்றன.
துறை சார்ந்த நிதிகள், கடன் சார்ந்த நிதிகள், ஈ.டி.எப்.,கள், தங்க நிதிகள் போன்ற திட்டங்களும் இருக்கின்றன. பொதுவாக நிதி ஆலோசகர்கள், ஒருவரின் முதலீட்டு உத்தியில் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் அவசியம் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஒருவரின் நிதி இலக்கிற்கு ஏற்ப பொருத்தமான திட்டங்களில் முதலீடு செய்வதும் அவசியம் என்கின்றனர். மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பல வகை இருந்தாலும், அடிப்படையில் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் தொகை அவர்கள் சார்பில் தொழில்முறை நிதி மேலாளரால் பங்குகள் உள்ளிட்ட நிதி சாதனங்களில் முதலீடு செய்யப்பட்டு அதன் பலன் முதலீட்டாளர்களுக்கு அவர்கள் வாங்கும் யூனிட்கள் அடிப்படையில் பிரித்தளிக்கப்படுகிறது. முதலீட்டிற்கான நல்ல பலன் தரக்கூடியதாக கருதப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு தொடர்பான சாதகமான பலன்கள் பற்றி நிதி வல்லுனர்கள் கூறுபவை:
பணவீக்கம்பணவீக்கத்தின் பாதிப்பை நீங்கள் அறிந்திருக்கலாம். நீண்ட கால நோக்கில் உங்கள் முதலீட்டின் மீது பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்யக்கூடிய அளவிலான பலனை மியூச்சுவல் பண்ட்கள் அளிக்க கூடியவையாக இருக்கின்றன.
நிதி மேலாளர்கள்மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பண்ட் மேனேஜர் எனப்படும் தொழில்முறை வல்லுனர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அவர்கள் கீழ் ஆய்வுக்குழுவும் வழிகாட்டுகிறது. எனவே, மியூச்சுவல் பண்ட் திட்ட நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அவர்கள் செயல்படுகின்றனர். தனிநபராக முதலீடு செய்வதை விட சிறந்த முறையில் இத்திட்டங்கள் நிர்வகிக்கப்பட்டு, ரிஸ்க்கும் குறைக்கப்படுகின்றன.
பரவலாக்கம்மியூச்சுவல் பண்ட்கள் முதலீட்டாளர்களிடம் திரட்டும் பணம் பல்வேறு துறை பங்குகள் மற்றும் நிதி சாதனங்களில் பரவலாக முதலீடு செய்யப்படுகின்றன. குறைவான முதலீடு வாய்ப்பு மட்டுமே கொண்டுள்ள சில்லரை முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.
பணமாக்கும் வசதிமியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள், தேவை ஏற்படும்போது வெளியேறி பணமாக்கி கொள்ளும் வசதி இருக்கிறது. ‘குளோஸ்ட் எண்ட்’ வகை திட்டங்களில் கால வரையறை உண்டு. இவற்றை பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்யலாம். ‘ஓபன் எண்ட்’ வகை திட்டங்களில், வெளியேறும்போது என்.ஏ.வி., எனப்படும் நிகர சொத்து மதிப்பு அடிப்படையிலான தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்த செலவுபங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய அதிக பணம் தேவை. மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மூலம் குறைவான செலவிலேயே முதலீடு செய்ய முடியும். 500 அல்லது 1,000 ரூபாய் குறைவான முதலீட்டில் கூட பங்குகளின் நீண்டகால பலனை பெறலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|