வரு­கி­றது பண்­டிகை காலம் :நுகர்வோர் சாதன  நிறு­வ­னங்கள் சுறு­சு­றுப்பு:புதிய மாடல்­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்டம்வரு­கி­றது பண்­டிகை காலம் :நுகர்வோர் சாதன நிறு­வ­னங்கள் ... ... இந்தியர்களின் ஓய்வுக்கால திட்டமிடல் இந்தியர்களின் ஓய்வுக்கால திட்டமிடல் ...
மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் சாதகங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
07:27

முத­லீடு வாய்ப்­புகள் பற்றி பேசப்­படும் போது, வைப்பு நிதி, பங்­குகள், பத்­தி­ரங்கள் ஆகி­ய­வற்­றுடன் மியூச்­சுவல் பண்ட்கள் பற்­றியும் தவ­றாமல் குறிப்­பி­டப்­ப­டு­கின்றன. மியூச்­சுவல் பண்ட்­களில் பல­வி­த­மான திட்­டங்கள் இருக்­கின்­றன.
துறை சார்ந்த நிதிகள், கடன் சார்ந்த நிதிகள், ஈ.டி.எப்.,கள், தங்க நிதிகள் போன்ற திட்­டங்­களும் இருக்­கின்­றன. பொது­வாக நிதி ஆலோ­ச­கர்கள், ஒரு­வரின் முத­லீட்டு உத்­தியில் மியூச்­சுவல் பண்ட் திட்­டங்கள் அவ­சியம் இருக்க வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்­றனர். ஒரு­வரின் நிதி இலக்­கிற்கு ஏற்ப பொருத்­த­மான திட்­டங்­களில் முத­லீடு செய்­வதும் அவ­சியம் என்­கின்­றனர். மியூச்­சுவல் பண்ட் திட்­டங்கள் பல வகை இருந்­தாலும், அடிப்­ப­டையில் முத­லீட்­டா­ளர்­க­ளிடம் இருந்து திரட்­டப்­படும் தொகை அவர்கள் சார்பில் தொழில்­முறை நிதி மேலா­ளரால் பங்­குகள் உள்­ளிட்ட நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்­யப்­பட்டு அதன் பலன் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அவர்கள் வாங்கும் யூனிட்கள் அடிப்­ப­டையில் பிரித்­த­ளிக்­கப்­ப­டு­கி­றது. முத­லீட்­டிற்­கான நல்ல பலன் தரக்­கூ­டி­ய­தாக கரு­தப்­படும் மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் முத­லீடு தொடர்­பான சாத­க­மான பலன்கள் பற்றி நிதி வல்­லு­னர்கள் கூறு­பவை:
பண­வீக்கம்பண­வீக்­கத்தின் பாதிப்பை நீங்கள் அறிந்­தி­ருக்­கலாம். நீண்ட கால நோக்கில் உங்கள் முத­லீட்டின் மீது பண­வீக்­கத்தின் தாக்­கத்தை ஈடு­செய்­யக்­கூ­டிய அள­வி­லான பலனை மியூச்­சுவல் பண்ட்கள் அளிக்க கூடி­ய­வை­யாக இருக்­கின்­றன.
நிதி மேலா­ளர்கள்மியூச்­சுவல் பண்ட் திட்­டங்கள் பண்ட் மேனேஜர் எனப்­படும் தொழில்­முறை வல்­லு­னர்­களால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன. அவர்கள் கீழ் ஆய்­வுக்­கு­ழுவும் வழி­காட்­டு­கி­றது. எனவே, மியூச்­சுவல் பண்ட் திட்ட நோக்­கத்தை நிறை­வேற்றும் வகையில் அவர்கள் செயல்­ப­டு­கின்­றனர். தனி­ந­ப­ராக முத­லீடு செய்­வதை விட சிறந்த முறையில் இத்­திட்­டங்கள் நிர்­வ­கிக்­கப்­பட்டு, ரிஸ்க்கும் குறைக்­கப்­ப­டு­கின்­றன.
பர­வ­லாக்கம்மியூச்­சுவல் பண்ட்கள் முத­லீட்­டா­ளர்­க­ளிடம் திரட்டும் பணம் பல்­வேறு துறை பங்­குகள் மற்றும் நிதி சாத­னங்­களில் பர­வ­லாக முத­லீடு செய்­யப்­ப­டு­கின்­றன. குறை­வான முத­லீடு வாய்ப்பு மட்­டுமே கொண்­டுள்ள சில்­லரை முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இது மிகவும் ஏற்­ற­தாகும்.
பண­மாக்கும் வசதிமியூச்­சுவல் பண்ட் முத­லீட்­டா­ளர்கள், தேவை ஏற்­ப­டும்­போது வெளி­யேறி பண­மாக்கி கொள்ளும் வசதி இருக்­கி­றது. ‘குளோஸ்ட் எண்ட்’ வகை திட்­டங்­களில் கால வரை­யறை உண்டு. இவற்றை பங்­குச்­சந்­தையில் பரி­வர்த்­தனை செய்­யலாம். ‘ஓபன் எண்ட்’ வகை திட்­டங்­களில், வெளி­யே­றும்­போது என்.ஏ.வி., எனப்­படும் நிகர சொத்து மதிப்பு அடிப்­ப­டை­யி­லான தொகையை பெற்­றுக்­கொள்­ளலாம்.
குறைந்த செலவுபங்­குச்­சந்­தையில் நேர­டி­யாக முத­லீடு செய்ய அதிக பணம் தேவை. மியூச்­சுவல் பண்ட் திட்­டங்கள் மூலம் குறை­வான செல­வி­லேயே முத­லீடு செய்ய முடியும். 500 அல்­லது 1,000 ரூபாய் குறை­வான முத­லீட்டில் கூட பங்­கு­களின் நீண்­ட­கால பலனை பெறலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)