பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
07:30
பணம் என்பது எண்கள் தொடர்பானது மட்டும் அல்ல, அது நம்முடன் நாம் கொண்டிருக்கும் உறவு தொடர்பானதும் தான் என்கிறார் பாரி டெஸ்லர். பணத்துடனான நம்முடைய உறவில் மாற்றத்தை கொண்டு வர நம்மைப்பற்றிய கணிப்புகள் மற்றும் பழைய முறைகளை கைவிட வேண்டும் என்கிறார் அவர்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள, ‘தி ஆர்ட் ஆப் மணி’ எனும் புத்தகத்தில், பணத்துடனான உறவை மேம்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார்:
தெளிவு: பாதி பேருக்கு மேல் பணம் பற்றிய தெளிவு இருப்பதில்லை. அவர்கள் தாங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறோம், பணம் எப்படி செலவாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. பெரும்பாலானோர் எண்களை பார்த்தாலே பயம் கொள்கின்றனர். ஆனால், பயத்தை கைவிட்டு பணத்துடன் கைகுலுக்குவது தான் முதல் படி.
நெருக்கம்: வாழ்க்கையின் பல விஷயங்களில் உங்களைப்பற்றி நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள். ஆனால், பணம் என்று வரும்போது தங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்திருக்கவில்லை. பணம் தொடர்பாக நமக்கும் நாமே நெருக்கமாக உணர்வதன் மூலம் பணம் தொடர்பான பழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வரலாம்.
அறிவு: பணத்தின் மொழி சிக்கலாக தோன்றலாம். பலரும் நிதி கல்வி இல்லாதவர்களாகவே இருகின்றனர். ஆனால், கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் பணத்தின் மொழி சிக்கலானது அல்ல. பணம் தொடர்பானவற்றை நீங்கள் எளிதாக கற்றுக்கொள்ளலாம். பணத்தின் மொழியை கற்பது ஆற்றலை கொடுக்கும்.
மன அமைதி: பணம் தொடர்பான விஷயத்தில் தெளிவு ஏற்பட்டாலே மனதில் பெரும் நிம்மதி உண்டாகும். மன அழுத்தம் ஏற்பட காரணம், பணம் இல்லாதது அல்ல; பணம் பற்றிய தெளிவு இல்லாததே. நிதி வாழ்க்கையின் போக்கை உணரும் போது மனதளவில் அமைதி உண்டாகிறது. பணம் தொடர்பான வெற்றி எது என கேட்டுக்கொள்ளுங்கள்.
மதிப்பு: பெரும்பாலானோருக்கு மதிப்பு என்பது பணத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. எனவே பணத்துடனான போராட்டங்கள் தங்கள் சுய மதிப்பை பெறுவதற்கான மற்றும் உணர்வதற்கான முயற்சியில் இருக்கிறது. மதிப்பு என்பது மனதில் ஆழ பதிந்திருப்பதால் அதை நம்முடைய செயல்கள் மற்றும் திறனுடன் தொடர்பு படுத்துவதற்கு பொறுமையாக உழைக்க வேண்டும். பணத்துடனான உங்கள் செயல்பாடு மெல்ல மதிப்பை நோக்கி முன்னேற வைக்கும்.
நம்பிக்கை: பலர் கடனில் மூழ்கிய நிலையில் நம்பிக்கை இல்லாமல் பணத்துடன் உறவு கொள்கின்றனர். பலர் தங்களுக்கு பணத்தை நிர்வகிக்கும் ஆற்றல் இல்லை என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். பணத்துடனான உறவு மேம்படும் என நம்ப வேண்டும். பலரும் பண விஷயங்களை தனியே மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கவலைப்படுகின்றனர். பணத்துடனான உறவை மேம்படுத்திக்கொள்ள உதவி கேட்கவும் தயங்க கூடாது. உதவி பெறலாம் என்பதையே பலரும் அறிந்திருக்கவில்லை. அதற்கு அவர்களுக்கு கற்றுத்தரப்படவில்லை. தகுதி வாய்ந்த நபர்களை நாடி தெளிவு பெற வேண்டும். நிதி ஆதரவுக்கான அமைப்பை ஏற்படுத்திக்கொள்வது ஆற்றலை அளிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|