செலவு பொறியில் சிக்குவது ஏன்?செலவு பொறியில் சிக்குவது ஏன்? ... பொரு­ளா­தார வளர்ச்சி நம்­பிக்கை தரும் அம்­சங்கள் பொரு­ளா­தார வளர்ச்சி நம்­பிக்கை தரும் அம்­சங்கள் ...
நிதி மகிழ்ச்­சிக்­கான வழி­காட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
07:30

பணம் என்­பது எண்கள் தொடர்­பா­னது மட்டும் அல்ல, அது நம்­முடன் நாம் கொண்­டி­ருக்கும் உறவு தொடர்­பா­னதும் தான் என்­கிறார் பாரி டெஸ்லர். பணத்­து­ட­னான நம்­மு­டைய உறவில் மாற்­றத்தை கொண்டு வர நம்­மைப்­பற்­றிய கணிப்­புகள் மற்றும் பழைய முறை­களை கைவிட வேண்டும் என்­கிறார் அவர்.
இது தொடர்­பாக அவர் எழு­தி­யுள்ள, ‘தி ஆர்ட் ஆப் மணி’ எனும் புத்­த­கத்தில், பணத்­து­ட­னான உறவை மேம்­ப­டுத்­திக்­கொள்ள வழி­காட்­டு­கிறார்:
தெளிவு: பாதி பேருக்கு மேல் பணம் பற்­றிய தெளிவு இருப்­ப­தில்லை. அவர்கள் தாங்கள் எவ்­வ­ளவு சம்­பா­திக்­கிறோம், பணம் எப்­படி செல­வா­கி­றது என்­பதை அறிந்­தி­ருக்­க­வில்லை. பெரும்­பா­லானோர் எண்­களை பார்த்­தாலே பயம் கொள்­கின்­றனர். ஆனால், பயத்தை கைவிட்டு பணத்­துடன் கைகு­லுக்­கு­வது தான் முதல் படி.
நெருக்கம்: வாழ்க்­கையின் பல விஷ­யங்­களில் உங்­க­ளைப்­பற்றி நீங்கள் தெளி­வாக இருக்­கி­றீர்கள். ஆனால், பணம் என்று வரும்­போது தங்கள் பலம் மற்றும் பல­வீ­னத்தை அறிந்­தி­ருக்­க­வில்லை. பணம் தொடர்­பாக நமக்கும் நாமே நெருக்­க­மாக உணர்­வதன் மூலம் பணம் தொடர்­பான பழக்­கங்­களில் மாற்­றத்தை கொண்டு வரலாம்.
அறிவு: பணத்தின் மொழி சிக்­க­லாக தோன்­றலாம். பலரும் நிதி கல்வி இல்­லா­த­வர்­க­ளா­கவே இரு­கின்­றனர். ஆனால், கற்­றுக்­கொள்ளும் ஆர்வம் இருந்தால் பணத்தின் மொழி சிக்­க­லா­னது அல்ல. பணம் தொடர்­பா­ன­வற்றை நீங்கள் எளி­தாக கற்­றுக்­கொள்­ளலாம். பணத்தின் மொழியை கற்­பது ஆற்­றலை கொடுக்கும்.
மன அமைதி: பணம் தொடர்­பான விஷ­யத்தில் தெளிவு ஏற்­பட்­டாலே மனதில் பெரும் நிம்­மதி உண்­டாகும். மன அழுத்தம் ஏற்­பட காரணம், பணம் இல்­லா­தது அல்ல; பணம் பற்­றிய தெளிவு இல்­லா­ததே. நிதி வாழ்க்­கையின் போக்கை உணரும் போது மன­த­ளவில் அமைதி உண்­டா­கி­றது. பணம் தொடர்­பான வெற்றி எது என கேட்­டுக்­கொள்­ளுங்கள்.
மதிப்பு: பெரும்­பா­லா­னோ­ருக்கு மதிப்பு என்பது பணத்­துடன் தொடர்பு கொண்­டி­ருக்­கி­றது. எனவே பணத்­து­ட­னான போராட்­டங்கள் தங்கள் சுய மதிப்பை பெறு­வ­தற்­கான மற்றும் உணர்­வ­தற்­கான முயற்­சியில் இருக்­கி­றது. மதிப்பு என்­பது மனதில் ஆழ பதிந்­தி­ருப்­பதால் அதை நம்­மு­டைய செயல்கள் மற்றும் திற­னுடன் தொடர்பு படுத்­து­வ­தற்கு பொறு­மை­யாக உழைக்க வேண்டும். பணத்­து­ட­னான உங்கள் செயல்­பாடு மெல்ல மதிப்பை நோக்கி முன்­னேற வைக்கும்.
நம்­பிக்கை: பலர் கடனில் மூழ்­கிய நிலையில் நம்­பிக்கை இல்­லாமல் பணத்­துடன் உறவு கொள்­கின்­றனர். பலர் தங்­க­ளுக்கு பணத்தை நிர்­வ­கிக்கும் ஆற்றல் இல்லை என நினைத்­துக்­கொள்­கின்­றனர். ஆனால், நாம் நம்­பிக்கை கொள்ள வேண்டும். பணத்­து­ட­னான உறவு மேம்­படும் என நம்ப வேண்டும். பலரும் பண விஷ­யங்­களை தனியே மேற்­கொள்ள வேண்­டி­யி­ருப்­ப­தாக கவ­லைப்­ப­டு­கின்­றனர். பணத்­து­ட­னான உறவை மேம்­ப­டுத்­திக்­கொள்ள உதவி கேட்­கவும் தயங்க கூடாது. உதவி பெறலாம் என்­ப­தையே பலரும் அறிந்­தி­ருக்­க­வில்லை. அதற்கு அவர்களுக்கு கற்­றுத்­த­ரப்­ப­ட­வில்லை. தகுதி வாய்ந்த நபர்­களை நாடி தெளிவு பெற வேண்டும். நிதி ஆத­ர­வுக்­கான அமைப்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது ஆற்­றலை அளிக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)