பி.என்.பி., ஹவுசிங் நிறு­வனம் பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­கி­றதுபி.என்.பி., ஹவுசிங் நிறு­வனம் பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­கி­றது ... அமெ­ரிக்­காவில் அதி­ரடி ; ரூ.32,361 கோடிக்கு ‘யாகூ’ விற்­பனை; ‘வெரிசான்’ நிறு­வனம் வாங்குகிறது அமெ­ரிக்­காவில் அதி­ரடி ; ரூ.32,361 கோடிக்கு ‘யாகூ’ விற்­பனை; ‘வெரிசான்’ ... ...
மத்திய அரசின் நிதியால் ஐ.ஓ.பி., – சி.பி.ஐ.,க்கு பயன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2016
07:19

புதுடில்லி : மத்­திய அரசு, சமீ­பத்தில், 13 பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, பங்கு மூல­த­ன­மாக, 22,915 கோடி ரூபாய் அளித்­துள்­ளது. இதில், இந்­தியன் ஓவர்சீஸ் வங்­கிக்கு, 3,101 கோடி ரூபாய், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்­தி­யா­வுக்கு, 1,729 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வகையில் இரு வங்­கி­களும், அவற்­றிடம் உள்ள மத்­திய அரசின் பங்கு மூல­த­னத்­திற்கு ஏற்ப, அதிக நிதி ஆதாயம் பெற்­றுள்­ளன. இதன் மூலம், ‘வாராக்­கடன் நெருக்­க­டியை சந்­தித்து வந்த இந்த வங்­கிகள், அவற்றின் சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டு, நிதி­நி­லையை சீர்­ப­டுத்திக் கொள்ள வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது’ என, ‘மூடிஸ்’ தர நிர்­ணய நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
வாராக்­கடன் அதி­க­ரித்­துள்­ளதால், பொதுத் துறை வங்­கி­களின் சொத்து மதிப்பு சரி­வ­டைந்­துள்­ளது. குறிப்­பாக, உருக்கு மற்றும் மின்­சார துறை­களில், கொடுத்த கடனை வசூ­லிக்க முடி­யாமல் வங்­கிகள் திணறி வரு­கின்­றன. அதனால், அவை, புதிய கடன்­களை கொடுக்க தயங்­கு­கின்­றன. சொத்து மதிப்பு குறைந்­துள்­ளதால், வெளிச் சந்­தையில், நிதி திரட்­டு­வதும், அவற்­றுக்கு கடி­ன­மாக உள்­ளது. இதை கருத்தில் கொண்டு, 2015 – 19ம் நிதி­யாண்­டு­களில், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூல­த­ன­மாக அளிக்க, மத்­திய அரசு முடிவு செய்­தது.
அதன்­படி, கடந்த நிதி­யாண்டில், முதல் தவ­ணை­யாக, 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டது. நடப்பு நிதி­யாண்­டிற்கு, கடந்த வாரம், 13 வங்­கி­க­ளுக்கு, 22,915 ரூபாய் அளிக்­கப்­பட்­டது.எஞ்­சிய தொகை, வங்­கி­களின் கடன் – டிபாசிட் வளர்ச்சி விகி­தத்தை கணக்­கிட்டு வழங்­கப்­படும். அடுத்த, இரு நிதி­யாண்­டு­களில், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, மத்­திய அரசு, 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூல­தனம் வழங்க உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)