பதிவு செய்த நாள்
26 ஜூலை2016
07:19
புதுடில்லி : மத்திய அரசு, சமீபத்தில், 13 பொதுத் துறை வங்கிகளுக்கு, பங்கு மூலதனமாக, 22,915 கோடி ரூபாய் அளித்துள்ளது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, 3,101 கோடி ரூபாய், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவுக்கு, 1,729 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இரு வங்கிகளும், அவற்றிடம் உள்ள மத்திய அரசின் பங்கு மூலதனத்திற்கு ஏற்ப, அதிக நிதி ஆதாயம் பெற்றுள்ளன. இதன் மூலம், ‘வாராக்கடன் நெருக்கடியை சந்தித்து வந்த இந்த வங்கிகள், அவற்றின் சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டு, நிதிநிலையை சீர்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது’ என, ‘மூடிஸ்’ தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாராக்கடன் அதிகரித்துள்ளதால், பொதுத் துறை வங்கிகளின் சொத்து மதிப்பு சரிவடைந்துள்ளது. குறிப்பாக, உருக்கு மற்றும் மின்சார துறைகளில், கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. அதனால், அவை, புதிய கடன்களை கொடுக்க தயங்குகின்றன. சொத்து மதிப்பு குறைந்துள்ளதால், வெளிச் சந்தையில், நிதி திரட்டுவதும், அவற்றுக்கு கடினமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, 2015 – 19ம் நிதியாண்டுகளில், பொதுத் துறை வங்கிகளுக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூலதனமாக அளிக்க, மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, கடந்த நிதியாண்டில், முதல் தவணையாக, 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டிற்கு, கடந்த வாரம், 13 வங்கிகளுக்கு, 22,915 ரூபாய் அளிக்கப்பட்டது.எஞ்சிய தொகை, வங்கிகளின் கடன் – டிபாசிட் வளர்ச்சி விகிதத்தை கணக்கிட்டு வழங்கப்படும். அடுத்த, இரு நிதியாண்டுகளில், பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|