பதிவு செய்த நாள்
28 ஜூலை2016
05:16
புதுடில்லி : திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட, ‘நிடி ஆயோக்’ அமைப்பின் துணை தலைவர் அரவிந்த் பனகரியா கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி பாதிப்பால், வேளாண் பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இந்த நிலையிலும், கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.6 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இந்தாண்டு, பருவமழை துவங்கியுள்ளது; இது, வழக்கத்தை விட, கூடுதலாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதத்தை தாண்டும் என, எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், 7.9 சதவீதமாக உயர்ந்திருந்தது. கடந்த, ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2015 – 16ம் நிதிஆண்டில், 7.6 சதவீதமாக உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|