பதிவு செய்த நாள்
28 ஜூலை2016
05:18
மும்பை : மும்பை பங்கு சந்தை மற்றும் மொரீஷியஸ் பங்கு சந்தை ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய பங்குச் சந்தை நிறுவனங்களில் முக்கியமானது, மும்பை பங்கு சந்தை. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தை மற்றும், ‘ஸ்டாக் எக்ஸ்சேஞ் ஆப் மொரீஷியஸ்’ ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுகுறித்து, மொரீஷியஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியா, மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையில், பல ஆண்டுகளாக, கலாசார ரீதியாக நல்ல உறவு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையில், அதிகளவில் வணிகம் நடக்கிறது. தற்போது, மும்பை பங்கு சந்தை, மொரீஷியஸ் பங்குச்சந்தை ஆகியவற்றுக்கு இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து, பங்கு சந்தை நடவடிக்கை, முதலீடு, திட்டங்கள், தகவல் தொழில்நுட்டம், சந்தை பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளில், இரண்டும் இணைந்து செயல்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|