பதிவு செய்த நாள்
28 ஜூலை2016
05:19
மும்பை : எஸ்.பி.அப்பேரல்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 215 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. ஜவுளி துறையில் ஈடுபட்டு வரும், திருப்பூரை சேர்ந்த, எஸ்.பி.அப்பேரல்ஸ் நிறுவனத்திற்கு, 21 இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில், 3.60 கோடி ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது, பங்கு வெளியீட்டின் மூலம், நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைவர் பி.சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் நிறுவனம், பங்குகளை வெளியிட்டு, 215 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. ஒரு பங்கின் விலை, 265 – 268 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் ஆக., மாதம் பங்கு வெளியீடு இருக்கும். இதற்கான பணிகளை, மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர், சென்ட்ரம் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|