பதிவு செய்த நாள்
28 ஜூலை2016
05:20
புதுடில்லி : ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் நிறுவனம், 2016 – 17ம் நிதியாண்டில், 1.57 கோடி டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்யவும், 1.50 கோடி டன் உருக்கை விற்கவும் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், 2025ம் ஆண்டில், உருக்கு உற்பத்தி, 30 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டிற்கான, மத்திய பட்ஜெட்டில், சாலை மற்றும் ரயில்வே திட்டங்களில், அரசு, 2.18 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டு உள்ளது. மேலும் இந்தியாவில், மோட்டார் வாகன துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இவற்றால், உருக்கு பொருட்களுக்கு அதிக தேவை இருக்கும். எனவே, எங்கள் நிறுவனம், அதற்கு ஏற்ப அதிகளவில் உருக்கு பொருட்களை உற்பத்தி செய்ய, ஆலைகளை விரிவாக்கம் செய்தது. இதனால், ஜே.எஸ்.டபிள்யூ., உருக்கு உற்பத்தி மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|