ரியல் எஸ்டேட்: வங்­கி­களின் கண்­ணோட்டம் மாற வேண்டும்ரியல் எஸ்டேட்: வங்­கி­களின் கண்­ணோட்டம் மாற வேண்டும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு ...
‘லாக்மி, பாண்ட்ஸ், பேர் அண்டு லவ்லி’ இந்­திய ‘பிராண்­டு’­களில் போலி பொருட்கள்; சீனாவால் உள்­நாட்டு நிறு­வ­னங்கள் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2016
05:22

புது­டில்லி : ‘‘சீன நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் காப்­பு­ரிமை பெற்ற பொருட்­களை போலி­யாக தயா­ரித்து, அவற்றை இந்­தி­யா­விற்கே ஏற்­று­மதி செய்­வதால், உள்­நாட்டு நிறு­வ­னங்கள் பாதிக்­கப்­ ப­டு­கின்­றன,’’ என, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன், லோக்­ச­பாவில் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: சீன நிறு­வ­னங்கள், காப்­பு­ரிமை சட்­டத்தை மீறும் வகையில், இந்­திய நிறு­வ­னங்­களின் பிராண்டு பொருட்­களை, போலி­யாக தயா­ரித்து, இந்­தி­யா­விற்கே ஏற்­று­மதி செய்­கின்­றன. இந்­தி­யாவின், நட்ராஜ், ரேமண்ட், ஜே.கே. பைல்ஸ் அண்டு டூல்ஸ், பெவிகால், ஒனிடா, கோத்ரெஜ், போரோ­பிளஸ், டாபர், மிதா அண்டு கம்­பெனி போன்ற புகழ் பெற்ற பிராண்­டு­களின் பொருட்­களை, சீன நிறு­வ­னங்கள் போலி­யாக தயா­ரித்து, ஏற்­று­மதி செய்­கின்­றன. இந்­திய நிறு­வ­னங்­களின் ஒரு சில அகர்­பத்தி பிராண்­டு­க­ளையும், சீனா ஏற்­று­மதி செய்­கி­றது.
அச்சு அசலாக...இந்­தி­யாவைச் சேர்ந்த, கனிடி காஸ்­மெ­சி­டிக்கல்ஸ் நிறு­வனம், இமாச்­சல பிர­தே­சத்தில், சோலான் நகரில் உள்ள தொழிற்சாலையில், ‘லோட்டஸ், லக்மே’ பிராண்­டு­களில், அழகுப் பொருட்­களை தயா­ரித்து வரு­கி­றது. இப்பொருட்­களை, அச்சு அச­லாக,சீன நிறு­வ­னங்கள் தயா­ரித்து ஏற்­று­மதி செய்­துள்­ளன. சிவா எண்­டர்­பி­ரைசஸ் என்ற நிறு­வனம், 11 லட்­சத்து, 34 ஆயி­ரத்து, 360 ரூபாய் மதிப்­புள்ள அப்­பொ­ருட்­களை இறக்­கு­மதி செய்­துள்­ளது.இதே நிறு­வனம், இந்­தி­யாவில், இந்­துஸ்தான் யுனி­லிவர், செச்வன் ஸ்டாபிலோ ஆகிய நிறு­வ­னங்­களின், ‘லாக்மி, பாண்ட்ஸ், பேர் அண்டு லவ்லி’ போன்ற அழகு பொருட்­களின் போலி­க­ளையும், சீனாவில் இருந்து இறக்­கு­மதி செய்­துள்­ளது.
சீனாவில் இருந்து சமீ­பத்தில் இறக்குமதியான இந்த போலிப் பொருட்­களை, சுங்க அதி­கா­ரிகள் பறி­முதல் செய்து, வழக்கு பதிவு செய்­துள்­ளனர்.இந்­தி­யாவில் காப்­பு­ரிமை பெற்ற பொருட்­களை, சீன நிறு­வ­னங்கள் போலி­யாக தயா­ரித்து அனுப்­பு­வதால், தங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக, உள்­நாட்டு நிறு­வ­னங்கள் புகார் தெரி­வித்­துள்­ளன. இதை­ய­டுத்து, பீஜிங்கில் உள்ள இந்­திய துாத­ரகம், இப்­பி­ரச்­னையை, சீன அரசின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றுள்­ளது.
வழக்குசீன அரசு, ‘முதலில் வரு­வோ­ருக்கே காப்­பு­ரிமை’ என்ற கொள்­கையை கடை­பி­டிக்­கி­றது. அதை பின்­பற்றி, இந்­தி­யாவைச் சேர்ந்த சில நிறு­வ­னங்­களின் பொருட்­க­ளுக்கு, சீன அரசு, காப்­பு­ரிமை வழங்­கி­யுள்­ளது. எனினும், காப்­பு­ரிமை மீறல் தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்கள் தான், அவற்றின் பொருட்­களை போலி­யாக தயா­ரிக்கும் நிறு­வ­னங்கள் மீது, சீனாவில் வழக்கு தொடுக்க முடியும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)