பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
16:01
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், தக்காளி வருகிறது.இரண்டு மாதத்திற்கு முன், நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது, ஒரு கிலோ தக்காளி, 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பதுக்கலை தடுக்க, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததால், தக்காளி விலை சரிந்தது.தற்போது, மாநிலம் முழுவதும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், தமிழகத்திற்கு தக்காளி வரத்து துவங்கியுள்ளது. இதையடுத்து, தக்காளி விலை சரிந்து வருகிறது.தற்போது, சென்னை உள்ளிட்ட இடங்களில், மொத்த விலையில், ஒரு கிலோ நாட்டு தக்காளி, 10 ரூபாய்க்கும், சில்லரை விலையில், 14 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூர் தக்காளி, ஒரு கிலோ மொத்த விலையில், 25 ரூபாய்க்கும், சில்லரை விலையில், 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|