பதிவு செய்த நாள்
30 ஜூலை2016
00:00
புதுடில்லி:எல்.ஐ.சி., – ஆக்சிஸ் பேங்க் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், ஆயுள் காப்பீட்டு சந்தையில், 76.8 சதவீத சந்தை பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது. ஆக்சிஸ் வங்கி, நாடு முழுவதும், 3,000 கிளைகளுடன், தனியார் துறையில் மூன்றாவது பெரிய வங்கியாக திகழ்கிறது. அண்மையில் மத்திய அரசு, காப்பீட்டு துறையில் இருந்த கடுமையான நெறிமுறைகளை தளர்த்தியது.
இதன் விளைவாக, ஆக்சிஸ் வங்கி – எல்.ஐ.சி., இடையில், தற்போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம், ஆக்சிஸ் வங்கி கிளைகளில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் காப்பீடுகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து, எல்.ஐ.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆக்சிஸ் – எல்.ஐ.சி., ஒப்பந்தத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு, எளிய முறையில் காப்பீடு சேவை வழங்கப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|