பதிவு செய்த நாள்
25 ஆக2016
00:21
புதுடில்லி : தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:உலகளவில், மொபைல்போன் வாடிக்கையாளர்கள், குறிப்பாக, இளம் வயதினர், அதிக அளவில் படங்களையும், தகவல்களையும் பரிமாறிக் கொள்ளவே விரும்புகின்றனர். மொபைல்போனில் பேசுவதில் அவர்களுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது. திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பார்க்க, அதிவேகமான இணையதள வசதி பயன்படுகிறது. இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில், இத்தகைய வசதியை விரும்பும் போக்கு காணப்படுகிறது. அதனால், அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள, இந்தியா, பிரேசில், இந்தோனேஷியா போன்ற நாடுகளில், அதிவேகமான இணையதள வசதியை வழங்க, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம், மொபைல்போன் சந்தாதாரர்களின் நம்பிக்கையை நிறுவனங்கள் பெற முடியும். இது, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|