பதிவு செய்த நாள்
26 ஆக2016
00:09
மும்பை : ‘இந்தியாவில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் விகிதம் குறைந்துள்ளது’ என, மார்கன் ஸ்டான்லி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:கடந்த, 1996ம் ஆண்டு முதல், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் விபரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் விகிதம், மிகவும் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
மீள முடியாத நிலைசர்வதேச பொருளாதார மந்தநிலையால், 2001 – 02 மற்றும், 2008 – 09ம் நிதியாண்டுகளில், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் பெரிதும் குறைந்தது. அந்த அளவை விட, தற்போது, நிறுவனங்களின் வருவாய் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு, அதிக வட்டி விகிதம், தனியார் துறை சந்தித்து வரும் அளவிற்கு அதிகமான கடன் சுமை, மூலதனப் பொருட்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களை கூறலாம். இத்துடன், சர்வதேச மந்தநிலையும், இந்திய நிறுவனங்களின் வருவாயை பதம் பார்த்துள்ளன.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, சேமிப்பை அதிகரிப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதனால், நிறுவனங்களின் வருவாய் சரிவு பிரச்னை, கடந்த ஆண்டுடன் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நிகழவில்லை. நிறுவனங்களின் வருவாய் விகிதம் உயர, மேலும் நான்கு காலாண்டுகள் ஆகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் விகிதம் சிறிதளவிற்கே குறைந்தது. அதன் பின், உலகளவில் எழுச்சி ஏற்பட்ட போது, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் பரவலான வியாபார உத்தியை கடைபிடித்தன. அவை, இந்தியாவிற்கு வெளியே, வர்த்தக நடவடிக்கைகளை துவக்கின; ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தின. அதனால், அந்நிறுவனங்களின் சர்வதேச வருவாய் அதிகரித்தது. ஆனால், 2008ல் ஏற்பட்ட, சர்வதேச பொருளாதார நெருக்கடியால், இந்திய நிறுவனங்களின் வருவாய் குறைந்தது. அதில் இருந்து, இன்னும் மீள முடியாத நிலையில், இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன.
சில ஆண்டுகளாகும்மேலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவையும், வருவாய் சரிய வழி வகுத்துள்ளது. இந்நிறுவனங்களின் அன்னிய வருவாய் உயர, சில ஆண்டுகள் ஆகும். இந்த நிலையிலும், இந்தியா, வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில், முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, கடந்த, 2013க்குப் பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிலையாக மேம்பாடு கண்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
2008ல் ஏற்பட்ட, சர்வதேச பொருளாதார நெருக்கடியால், இந்திய நிறுவனங்களின் வருவாய் குறைந்தது. அதில் இருந்து, இன்னும் மீள முடியாத நிலையில், இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|