வெல்ஸ்பன் இந்­தியா ஜவுளி சப்­ளையில் சர்ச்சைவெல்ஸ்பன் இந்­தியா ஜவுளி சப்­ளையில் சர்ச்சை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரிப்பு ...
இந்­திய கார்ப்­பரேட் நிறு­வ­னங்களின் இது­வரை இல்­லாத சரிவு; வரு­வாயை பதம் பார்த்த கார­ணங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
00:09

மும்பை : ‘இந்­தி­யாவில், கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வருவாய் விகிதம் குறைந்­துள்­ளது’ என, மார்கன் ஸ்டான்லி நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விபரம்:கடந்த, 1996ம் ஆண்டு முதல், இந்­திய கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வருவாய் விப­ரங்கள் ஆய்­வுக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டன. அதில், தற்­போது, கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வருவாய் விகிதம், மிகவும் குறைந்து இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.
மீள முடியாத நிலைசர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லையால், 2001 – 02 மற்றும், 2008 – 09ம் நிதி­யாண்­டு­களில், இந்­திய கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வருவாய் பெரிதும் குறைந்­தது. அந்த அளவை விட, தற்­போது, நிறு­வ­னங்­களின் வருவாய் விகிதம் வெகு­வாக குறைந்­துள்­ளது. இதற்கு, நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் ஏற்­பட்­டுள்ள தொய்வு, அதிக வட்டி விகிதம், தனியார் துறை சந்­தித்து வரும் அள­விற்கு அதி­க­மான கடன் சுமை, மூல­தனப் பொருட்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் அதி­க­ரிப்பு போன்ற கார­ணங்­களை கூறலாம். இத்­துடன், சர்­வ­தேச மந்­த­நி­லையும், இந்­திய நிறு­வ­னங்­களின் வரு­வாயை பதம் பார்த்­துள்­ளன.
மத்­திய அரசும், ரிசர்வ் வங்­கியும், நிதிப் பற்­றாக்­கு­றையை கட்­டுப்­ப­டுத்தி, சேமிப்பை அதி­க­ரிப்­ப­தற்கு போது­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன. அதனால், நிறு­வ­னங்­களின் வருவாய் சரிவு பிரச்னை, கடந்த ஆண்­டுடன் முடி­வுக்கு வரும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், அவ்­வாறு நிக­ழ­வில்லை. நிறு­வ­னங்­களின் வருவாய் விகிதம் உயர, மேலும் நான்கு காலாண்­டுகள் ஆகும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
கடந்த காலங்­களில், சர்­வ­தேச பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­பட்ட போது, கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வருவாய் விகிதம் சிறி­த­ள­விற்கே குறைந்­தது. அதன் பின், உல­க­ளவில் எழுச்சி ஏற்­பட்ட போது, இந்­தி­யாவின் மிகப்பெரிய நிறு­வ­னங்கள் பர­வ­லான வியா­பார உத்­தியை கடை­பி­டித்­தன. அவை, இந்­தி­யா­விற்கு வெளியே, வர்த்­தக நட­வ­டிக்­கை­களை துவக்­கின; ஏற்­று­ம­தி­யிலும் கவனம் செலுத்­தின. அதனால், அந்­நி­று­வ­னங்­களின் சர்­வ­தேச வருவாய் அதி­க­ரித்­தது. ஆனால், 2008ல் ஏற்­பட்ட, சர்­வ­தேச பொரு­ளா­தார நெருக்­க­டியால், இந்­திய நிறு­வ­னங்­களின் வருவாய் குறைந்­தது. அதில் இருந்து, இன்னும் மீள முடி­யாத நிலையில், இந்­தி­யாவின் கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள் உள்­ளன.
சில ஆண்டுகளாகும்மேலும், டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகி­ய­வையும், வருவாய் சரிய வழி வகுத்­துள்­ளது. இந்­நி­று­வ­னங்­களின் அன்­னிய வருவாய் உயர, சில ஆண்­டுகள் ஆகும். இந்த நிலை­யிலும், இந்­தியா, வளரும் நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்­சியில், முத­லி­டத்தில் உள்­ளது. குறிப்­பாக, கடந்த, 2013க்குப் பின், நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, நிலை­யாக மேம்­பாடு கண்டு வரு­கி­றது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.
2008ல் ஏற்­பட்ட, சர்­வ­தேச பொரு­ளா­தார நெருக்­க­டியால், இந்­திய நிறு­வ­னங்­களின் வருவாய் குறைந்­தது. அதில் இருந்து, இன்னும் மீள முடி­யாத நிலையில், இந்­தி­யாவின் கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள் உள்­ளன

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)