பதிவு செய்த நாள்
29 ஆக2016
06:53
பெங்களூரு : மின்னணு வர்த்தக நிறுவனமான, பிளிப்கார்ட், தன் வணிகர்களுக்கு, 75 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வசதி செய்து தர இருக்கிறது.
பிளிப்கார்ட் நிறுவனம், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், 125 கோடி ரூபாய் அளவுக்கு, தன்னுடைய விற்பனையாளர்களுக்கு கடன் வசதி செய்து கொடுத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக, தன் வணிகர்களுக்கு, 75 கோடி ரூபாய் அளவுக்கு, கடன் வசதி செய்துதர இருக்கிறது. ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து, விற்பனையாளர்களுக்கு, 125 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது பிளிப்கார்ட். இதனால் மொபைல்போன், எலக்ட்ரானிக்ஸ், ஆடைகள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள் பயனடைந்தார்கள். கடன் பிரச்னைகள் காரணமாக, தொழில் செய்வதில் சிறு வணிகர்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதால், இது போன்ற திட்டங்கள் மூலமாக, அவர்களுக்கு உதவுவதாக, பிளிப்கார்ட் தெரிவித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|