விற்­ப­னையை அதி­க­ரிக்க உதவும் ‘ஸ்மார்ட் பேக்­கேஜிங்’விற்­ப­னையை அதி­க­ரிக்க உதவும் ‘ஸ்மார்ட் பேக்­கேஜிங்’ ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.67.18 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.67.18 ...
சரக்கு மற்றும் சேவை வரி திட்­டத்தில் ‘அசோசெம்’ கோரிக்கை; அப­ராதம் விதிப்பில் விலக்கு தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
06:55

புது­டில்லி : ‘சரக்கு மற்றும் சேவை வரி அம­லா­கும்­போது, துவக்க காலத்தில் ஏற்­படும் சில தவ­று­க­ளுக்கு அப­ராதம் விதிக்கக் கூடாது’ என, இந்­திய வர்த்­தக தொழில் கூட்­ட­மைப்­பான ‘அசோசெம்’ மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.
அதன் விபரம்: அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் சரக்கு மற்றும் சேவை வரி நடை­மு­றைக்கு வரும் போது, கலால் வரி, சேவை வரி, உள்ளூர் வரி என, பல­வித வரிகள் முடி­விற்கு வரும். அதே­ச­மயம், இந்த வரி நடை­மு­றை­களில் இருந்து, சரக்கு மற்றும் சேவை வரி திட்­டத்­திற்கு மாறு­வ­தற்கு, தொழில் நிறு­வ­னங்கள், அவற்றின் கணக்கு தணிக்கை முறை­க­ளிலும், கணினி செயல்­பா­டு­க­ளிலும் மாற்­றங்கள் செய்­வது அவ­சி­ய­மாகும். ஆவ­ணங்­களில் இருந்து, ‘டிஜிட்டல்’ முறைக்கு சரக்கு மற்றும் சேவை வரி சார்ந்த அனைத்து நடை­மு­றை­களும் மாற்­றப்­பட வேண்டும். இதற்கு சில காலம் ஆகும் என்­பதால், நிறு­வ­னங்­க­ளுக்கு போது­மான அவ­காசம் அளிக்க வேண்டும்.
வரி விதிப்பின் துவக்க காலத்தில், தொழில் நிறு­வ­னங்கள், சரக்கு மற்றும் சேவை வரியை கையா­ளும்­போது, சில தவ­றுகள் நேர வாய்ப்­புள்­ளது. எனவே, நிறு­வ­னங்கள், உள்­நோக்­க­முடன் செய்­யாத எத்­த­கைய தவ­று­க­ளுக்கும், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்­டத்தின் கீழ், அப­ராதம் விதிப்­பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, இந்­தி­யாவில் மேற்­கொள்­ளப்­படும் மிகப் பெரிய வரி சீர்­தி­ருத்த திட்­ட­மாகும். அதில் உள்ள பல்­வேறு விதி­மு­றைகள் குறித்து இன்னும் தெளிவு படுத்த வேண்டும். நாடு முழு­வதும் ஒரே மாதி­ரி­யான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அம­லுக்கு வந்­தாலும், அவற்றை நிர்­வ­கிக்கும் அதி­காரம், மத்­திய அர­சுக்கும், மாநில அர­சு­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது, மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு இடையே, கருத்து வேறு­பாடு எழு­வ­தற்கு வழி வகுக்கும். அதனால், மத்­திய, மாநில அர­சுகள் இணைந்து, ஒரே அமைப்பின் கீழ், வரி விதிப்பு முறையை நிர்­வ­கிக்­கலாம்.
மேலும், சரக்கு மற்றும் சேவை வரி வரைவு அறிக்­கையில், வரி விதிப்பு அம­லுக்கு வந்த 3 – 5 ஆண்­டு­க­ளுக்குள், பல கட்ட தணிக்­கை­களும், ஆய்­வு­களும் மேற்­கொள்­ளப்­படும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வரி­வி­திப்பு நடை­முறை முழு­வதும் கணினி மய­மாக்­கப்­பட்டு ஒவ்­வொரு வர்த்­தக பரி­வர்த்­த­னையும் பதிவு செய்­யப்­பட வேண்டும்; அக்­க­ணக்கு விப­ரங்­களை மாதந்­தோறும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், வரை­வ­றிக்கை கூறு­கி­றது. இது, நிர்­வாக நடை­மு­றை­களை மேலும் கடி­ன­மாக்கும். சுல­ப­மாக தொழில் செய்­வ­தற்­காக கொண்டு வருப்­படும், இந்த வரி விதிப்பின் நோக்­கத்­திற்கு எதி­ராக அமைந்து விடும். இது­போன்ற பல கருத்­துக்கள், நாளை நடை­பெறும், சரக்கு மற்றும் சேவை வரிக்­கான, மாநில நிதி­ய­மைச்­சர்­களின் அதி­கா­ர­மிக்க குழுவின் கூட்­டத்தில், தொழில்­து­றை­யினர் சார்­பாக எடுத்­து­ரைக்­கப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)